
எமது நாட்டை பொறுத்தவரையில் ஒரு வளர்முக நாடாக இருப்பினும் கல்வியில் சிறந்த நாடாக காட்டப்படுகின்றது. எமது நாட்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் பெரும்பாலான அனைவரும் கல்வி கூடங்களுக்கு செல்வதற்காக பேருந்துகளையே நம்பி இருக்கின்றமை யாரும் மறுக்க முடியாத விடையமாகும், ஆனால் எமது அரச பேருந்து ஓட்டுனர்களும் சரி தனியார் பேருந்து ஓட்டுனர்களாக இருப்பினும் சரி மாணவர்களை அவர்களின் எதிர்கால கல்வி அபிவிருத்திக்காக தாம் ஒரு சிறு துளியேனும் உதவுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த சில காலமாக கிழக்கில் யுத்தம் ஓய்ந்து மக்கள் அன்றாட வாழ்கையினை அமைதியாக கொண்டு செல்லும் வேளையில் தமது குழந்தைகளையும் நம்பிக்கையோடு தனிமையில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகின்ற சூழலில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளமை மிகவும் மன வேதனைக்குரிய விடையமாகும். இவற்றுக்கு தற்போது புதிதாக உருவாகியுள்ள பேருந்து ஓட்டுனர்களிடையே ஏற்பட்டுள்ள போட்டியான சூழ்நிலையே காரணமாக கரதப்படுகின்றது. ஒரு மாணவன் பேருந்துக்காக காத்திருந்து கொண்டிருக்கும் போது அவனை கடந்து பல பேருந்துகள் செல்கின்றபோதும் அம்மாணவனையோ மாணவியையோ பேருந்து ஓட்டுனர்களால் ஏற்றிச் செல்ல முடியவில்லை இதனால் அம்மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் நேரத்திற்கு தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாமைக்கும் எமது சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கும் இவர்கள் காரணமாக இருப்பது வெட்கப்படவேண்டிய விடயமாக உள்ளது. பேருந்த ஓட்டுனர்களே இது உங்களின் கவனத்திற்கு நீங்களும் ஒரு சமூக சேவகர்கள்தான் உங்கள் சேவையும் எமது சமூத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது அதனை நீங்கள் சரியான முறையில் செய்வீர்களானால் எமது மாணவ சமூதாயம் முன்னேற்றமடைவதுடன் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டதாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உமது சேவையை செய்ய வேண்டும் என விருத்தி கேட்டுக்கொள்கின்றது.

