சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 67 பேர் பலி


சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குறைந்தது 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தெரிகிறது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.குவின்காய் மாகாணத்தின் ஜீகூ நகரில் இருந்து 30 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அவரிடம் கை குலுக்கி 5 நிமிடங்கள் பேசினார்.அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்காக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சியில் சற்று தள்ளி இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அமர்ந்திருந்தனர்.அப்போது கிலானி தனது இருக்கையிலிருந்து எழுந்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி வந்தார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் புனமுறுவலுடன் வரவேற்றார். இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு 5 நிமிடங்களே நீடித்தது

புதுவருட நல்வாழ்த்துக்கள்.


விருத்தியை பார்வையிடும் அனைத்துலக நண்பர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
viruththy.blogspot.com

கிழக்கு மாகாண முதலமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி


மலர்ந்திருக்கின்ற தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். முப்பது வருடகாலம் அனைத்துத்துறைகளிலுமே பின்நோக்கிச் சென்றிருந்தோம். ஆனால் இன்று அவை அனைத்திலும் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இன ஐக்கியத்தோடு கூடிய அபிவிருத்தியினை நாம் அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
இன்று மலர்ந்திரக்கின்ற இச் சித்திரைப் புத்தாண்டினை அனைவரும் மிகவும் மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்து, எதிர்காலத்தில் எமது நாடு அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும் எனக் கேட்டக்கொள்கின்றேன். மேலும் இனமத பேதங்களைக் கடந்து நல்லுறவுடன் கூடிய அரோக்கியமான ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப இச் சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் வழி வகுக்கும் எனக் கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.