அனைவரின் கண்களையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகை யான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார்.63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார்.விழாவின் தொடக்கமாக வெளியிடப்பட்ட ரிட்லி ஸ்காட்டின் ராபின் ஹூட் பட வெளியீட்டுக்கு ஐஸ்வர்யா படு ஒய்யாரமாக வந்து சேர்ந்தார். கலங்கடிக்கும் லேவண்டர் கலர் கவுன் அணிந்து வந்த 36 வயதான ஐஸ்வர்யா அனைவரின் கண்களையும் கவர்ந்தார். கடந்த ஆண்டும் கூட படு கலக்கலான உடை மற்றும் மேக்கப்புடன் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஐஸ்வர்யாவுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இணைந்து வரவில்லை. மாறாக ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா உடன் வந்திருந்தார்.இரு அழகான நடிகைகளும் படு ஸ்டைலிஷாக வந்தது கேன்ஸ் விழாவுக்கு புதுக் களையைக் கொடுத்தது.

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்


குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள்மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

பயங்கரவாதம் புற்றுநோய் போல: பாகிஸ்தானுக்கு ஆபத்து - ஒபாமா


புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஒபாமாவை கர்சாய் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் எனும் புற்றுநோய் அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் எதிரியாக இந்தியா இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தால் தான் அந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழைய சந்தேகங்களையும், மோசமான பழக்கங்களையும் ஒழித்து பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைத்து, ஆப்கானிஸ்தானில் ஸ்திரமான நிலையை உருவாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் பயங்கர வாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கர வாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் பாதுகாப்பாக இருந்தால் தான் அண்டை நாடான ஆப்கனும் பாதுகாப்பாக இருக்கும்.
பயங்கவராதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக்கொள்ள பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளது. ஒரே நாளில் இந்த விஷயத்தில் வெற்றி கிட்டிவிடாது. இந்த நடவடிக்கை யால் ஏராளமான உயிர்சேதம் ஏற்படும். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள்தான் அல்- குவைதா மற்றும் தலிபான்களின் சதி ஆலோசனை மையமாக விளங்குகிறது இவ்வாறு ஒபாமா கூறினார்.

பிள்ளைகள் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு



குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் ஒருசில இடங்களில் இடம்பெற்றிரு ப்பதனால் பெற்றோர் சமீப தினங்களாக பீதிய டைந்துள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மாண வன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட் டமை ஞாபகமிருக்கலாம். அதன் பின்னர் அடுத்தடு த்து ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனால் பெற் றோர் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவலை யடைந்துள்ளனர்.
களனியில் கடத்தப்பட்ட குழந்தையொன்று மாரவில பகு தியில் வைத்து மீட்கப்பட்டதையடுத்து அக்கடத்தலின் பின்னணி அம்பலத்துக்கு வருமென எதிர்பார்க்கப்ப டுகிறது. அக்குழந்தையைக் கடத்திச் சென்றவர் ஒரு வயோதிபப் பெண் ஆவார். பொதுமக்கள் மற்றும் ஊட கங்கள் தரப்பிலிருந்து கிடைத்த ஒத்துழைப்பு காரண மாகவே இக்குழந்தையை மீட்க முடிந்துள்ளது.
இக்குழந்தை கடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரம் உண்மையிலேயே பாராட்டத் தக்கது. ஊடகங்களின் ஒத்துழைப்பு காரணமாகவே அக் குழந்தையை பொதுமகன் ஒருவரால் அடையாளம் காண முடிந்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையை அடையாளம் கண்டவுடன், உட னடியாக அக்குழந்தையையும் சந்தேகத்துக்கிடமான பெண்ணையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவரின் சமூக நேயத் தன்மையைப் பாராட்டாம லிருக்க முடியாது. இச்செயல்களையெல்லாம் சிறந்த முன்னுதாரணங்களாகக் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க அக்குழந்தை கடத்தப்பட்டதற்கான நோக்கம் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அந்தரங்கமாக நடைபெற்று வருவதனாலேயே தகவல்களை அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
குழந்தைகளைக் கடத்தும் கொடியவர்களின் நோக்கம் கப்பம் பெறுவதற்காக இருக்கக்கூடுமென ஊகிக்கப்ப டுகிறது. குழந்தைகளைக் கடத்திச் சென்று பெற்றோரி டம் கப்பம் கோரிய ஓரிரு சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன. சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவங் களும் ஞாபகமிருக்கலாம். இச்சம்பவங்களில் சம்பந்த ப்பட்ட குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்திரு ந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாகத் தணிந்தி ருந்தன. தற்போது அக்கொடியவர்கள் மீண்டும் குழந் தைகளின் உயிருடன் விளையாடத் தொடங்கியுள்ள னர். இதனை எவருமே அனுமதிக்கலாகாது. பொலி ஸார் இவ்விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் பொதுமக்களும் இது சம்பந்தமாக பொலி ஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள் பொலிஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென் பது உண்மை.
குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடன் இரு க்க வேண்டியவர்கள் பெற்றோரேயாவர். பாடசாலை க்கோ அல்லது தனியார் வகுப்புக்கோ பிள்ளைகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. அது மாத் திரமன்றி நம்பிக்கைக்குரிய நபர் தவிர்ந்த வேறு எவ ருடனும் பிள்ளைகளை வெளியிடங்களுக்கு அனுப் புவதும் தவறு. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது பெற்றோருக்கு அவதானம் அவசியம்.
குற்றவாளிகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குற்றச்செ யலுக்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுத் துவிடலாகாது.

கொழும்பில் வெள்ளம்.


கொழும்பில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கின. கொழும்பு பெல்பொல விபஸ்ஸி மாவத்தை நீரில் மூழ்கி இருப்பதையும் வாகனமொன்று முழுமையாக நீரில் மூடப்பட்ட நிலையில் கிடப்பதையும் படங்களில் காண்க.

வடமுனை அ.த.க பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளை முதல்வர் பார்த்து இரசிக்கும் காட்சிகள்.


































நாடெங்கும் குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை

நாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் ஒரு சில குறிப்பிட்ட இலக்கங்களில் வெளிவரும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. உலகளாவிய ரீதியில் மேற்படி இலக்கங்களுக்குப் பதில் வழங்கிய நபர்கள் இது வரையில் 27 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தவிர, மூளைக்கு வழங்கப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே மேற்படி இறப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. இலங்கையில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இவ்வாறு பரவலாகப் பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன.இது மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் வதந்திகள் என வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.'மரண அழைப்பு' என அழைக்கப்படும் இந்த குறுஞ்செய்திகள், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானில் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளை, ஆண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது.அதன்பின்னர் மின்னஞ்சலிலும் அவ்வாறான அச்சுறுத்தல் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பரவத் தொடங்கியதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பீதியடையத் தொடங்கியதால் இது தொடர்பான ஆய்வுகளில் தொலைத்தொடர்புத் துறையினர் ஈடுபட்டபோதுதான் அது பொய்யான செய்தி எனத் தெரியவந்துள்ளது.அதேபோன்று, அச்சுறுத்தல் விடுக்கும் குறுஞ்செய்திகள் 2004 ஆம் ஆண்டு நைஜீரியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியதாக 'இன்டிபென்டன்ட் ஒன்லைன்' செய்திச் சேவை தெரிவித்துள்ளது

சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு

ஷெல் - ரூ. 219,
லாஃப் - ரூ. 323
சமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.
இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போக்குவரத்ததுச் சேவையே பின்தங்கிய கிராமங்களை கட்டியெழுப்பும்-கி.மா.ச.உ.பூ. பிரசாந்தன்.

வைத்தியசேவையானாலும், கல்விச் சேவையானாலும், சமூக சேவையானாலும் கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டுனாமால் போக்குவரத்துச் சேவை மிகவும் அத்தியாவசியமானதாகவுள்ளது. பட்டிப்பளை பிரதேசமே, வாகரைப் பிரதேசமோ, வெல்லாவெளி, வவுணதீவு உள்ளிட்ட எல்லைக் கிராமங்களின் மக்களுக்கு வாழ்வாதாரம் அத்தியாவசிய தேவகைள் விஸ்தரிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் வைத்தியர்கள் ஏனைய உத்தியோகஸ்தர்கள் சேவை வழங்க முன்வருகின்ற போதும், போக்குவரத்து சேவையின் குறைபாடுகளே தடைக்கல்லாக உள்ளது. எதிர்வரும் 03 வருடங்களுள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மூலம் பெரும்பாலான பாதைகள் புனரமைக்கப்படுவதற்கான அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்து நேர ஒழுங்கமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்ட சாரதிகள் நடத்துனர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறையின் போது பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நடத்துனர்களும், சாரதிகளும் பணயிகளுடன் அன்பாக பழக வேண்டியதுடன் ஒழுக்க விதிகளிலும், நேர ஒழுங்கமைப்புக்களிலும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்து ஒரு தொழில் என்பதற்கு அப்பால் இது ஒரு சேவை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து தொழிலாளர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு முடியாது நிலைமையும் , இடைத்தரகர்கள் கொள்வனவு செய்து இலாபம் உழைப்பதற்கும் அடிகோல் இடுவது இச் சேவையாகும்.
கலை, காலச்சாரங்களில் சமூகம் மாற்றடைய வேண்டுமானால் போக்குவரத்துச் சேவையாளர்கள் பங்கு துரிதமாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் திரு. உ. யுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் திரு. உதயகுமார், திட்டமிடல் பணிப்பாளர் நந்தசேன , நிமல் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 01.05.2010 மேதினமன்று மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை .-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

தமிழர் பிரதிநிதித்துவத்தின் இருப்பை தக்க வைக்கவே நாம் தேர்தலில் தனித்த போட்டியிட்டோம்.கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

இம் மாநகரத்தில் பேருந்து நிலைய கல் நாட்டும் விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து மதப் பெரியார்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களான கௌரவத்திற்குரிய துரைரெட்ணம், கிருஸ்னாணந்தராஜா, பூ.பிரசாந்தன், மாசிலாமணி ஐயா அவர்களுக்கும், மாநகர சபை அரசியல் உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏனைய பிரமுகர்களுக்கும், கட்டட ஒப்பந்த காரர்க்கும் அனைவருக்கும் வணக்கம்.
இந்த அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது பாட்டாளி புரம் என்பதனாலும், இன்று பாட்டாளி தினம் என்பதனாலும் இந்த முக்கியத்தவம் வாய்ந்த நாளில் பஸ் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியோடு இந்த மட்டக்களப்பு மாநகரிலே பல்வேறு தரப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையிலே, இன்று மட்டக்களப்பிலே பேருந்து நிலையம் மிக அழகாக, ஏனைய மாகாணத்திலிருக்கும் பஸ் பேருந்து நிலையத்தை ஒத்த பேருந்து தரிப்பிடம் ஒன்றை இங்கு எதிர்வரும் பத்தாம் மாதம் திறந்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை. அந்த காட்சியை நாமும் கண்டு கழிப்போம் என்ற சந்தோசமான நாளிலே இங்கு அமர்ந்திருக்கும் மட்டக்களப்பு வாழ் பெருமக்கள் ஒருவிடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அக்குழந்தையை அழகுபடுத்த வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இருப்போம். அதே போன்றுதான் இந்த மட்டக்களப்பு மாவட்டம் மீன் மகள், வாவி மகள் என்று பேர் வாங்கிய இம் மாவட்டம் ஒரு அழகான மாவட்டமாக வரவேண்டும் எனறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையிலே இது ஒரு அழகான மாநகரம். ஏதிர்காலத்தில் இதன் எழிச்சியோடு இதன் அடையாளங்களை காப்பாற்றிக்கொண்டு அழகு பெற வேண்டும் என்ற பெரு முயற்சி எனக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் இருக்கின்றது அதன் வெளிப்பாட்டு தன்மை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த பேருந்து நிலையம் என்பது முன்னரும் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டிருந்தது. நான் நினைக்கின்றேன் 1979ம் ஆண்டு ராஜம் செல்வநாயகம் இருந்த காலப்பகுதியிலே இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரான தயா என்கின்ற அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதாக கதை கூறுகின்றது. இருந்தும் அந்த நேரத்திலே இருந்த பணவசதிக்கும், அந்த நேரத்தில் இருந்த தொழில் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அழகு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். தற்போது இருக்கின்ற நவீன உலகத்தில் எங்களது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் இந்த திட்டம் மிக நீண்ட காலமாக இந்த மட்டக்களப்பை நலன் விரும்பிகள் ஊடாகவும், மக்கள் ஊடாகவும் இதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதிகளிலே நாங்கள் நிச்சயமாக செய்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது இதனை மாகாண கட்டிட பொறியியலாளர் வேல்மாணிக்கம் மூலம் இதனை படமாக்கி இருந்தோம். படங்களை வரைந்த பின் அதற்குரிய பணத்தினை பெற்றுக் கொள்ள மிக சிரமமாக இருந்தது. மாகாண சபையிலும், மாநகர சபையிலும் பணம் இல்லாத காரணத்தினால் இங்கு இயங்கிக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு கரையோர அபிவிரத்தி திட்டத்திற்குள் உள்வாங்கிய பொழுது இத்திட்டம் முடிவடையும் காலப்பகுதியில் இருப்பதால் இதனை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும் இது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி என்பதனால் இதனை ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவிடம் கூறியிருந்தபோது இதை உடனடியாக செய்து தருவேன் என கூறினார். இத்தி;ட்டம் முடிந்தாலும் விசேட நிதியின் மூலம் இதனை செய்து தருவதாக கூறிவிட்டு, 10 நிமிடம் கழித்து எனக்கு போன் பண்னி P.னு குறூஸ் அவர்களை பேசச் சொல்லி இருந்தார். நான் குறூஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மன்னார் மாவட்டத்திலே இருப்பதாக கூறியிருந்தார். நான் அவரிடம் கூறியிருந்தேன், பசில் ராஜபக்ஸ உடனடியாக பேச சொல்லியிருக்கிறார். கட்டிடம் சம்மந்தமாக பேச இருக்கிறார். மட்டக்களப்பு மாநகரம் சம்மந்தமாக 08 கோடி ரூபாய் கட்டடம் சம்மந்தமாக பேசுவார் அதை செய்துகொடுக்க அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டிருந்தேன் அவர் பேசியதன் அடிப்படையில் அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நாம் பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி கூற வேண்டும் இங்கு பிறக்காமல் இருந்தாலும் மட்டக்களப்பு மாநகரம் அழகாக வரவேண்டும் இங்கும் மீனினங்கள் மிக அழகான தங்கநகைகளிட்டு அழகான சேலைகளோடும் இருக்கவேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற பணிப்பாளர் குரூஸ் அவர்களுக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சாமித்தம்பி ஐயா அவர்களுக்கும் மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் எனினும் இந்ததிட்டம் அமுலாகி இருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் இது முழுமை பெற்று அனைவரும் எதிர்பார்த்த கட்டிடமாக பத்தாம் மாதம் திறப்பதற்கு வழிவகை செய்யவேண்டிய பொறுப்பு எமது ஒப்பந்தகாரரான மட்டக்களப்பு அழகுபெற நினைக்கின்ற ஒப்பந்தகாரரான ஆஞ்சநேயர் ஐயாவே காரணம் என நினைக்கின்றேன் நாங்கள் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சி எடுத்திருந்தாலும் எமது மக்கள் எதிர்பார்த்த அளவு அபிவிருத்திப்பணிகள் நடக்கவில்லை என்பதை உரைக்க முடிகின்றது மாநகரசபை உறுப்பினர்கள் மிக அக்கறை எடுக்கவேண்டும் நான் இரவு கொழும்பிலிருந்து வந்தபோது ஓட்டமாவடி பாலம் தாண்ட எல்லாப்பகுதிகளிலும் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மட்டக்களப்பிற்குள் வந்ததும் அரசடி கோவில் தாண்டியதும் எந்தவித மின்குமிழ்களும் இல்லை. இந்தபாதையில் மாத்திரம் ஐந்தாறு மின்குமிழ்கள் இருந்தது இதையெல்லாம் நடைமுறைப்படுத்த உள்நாட்டு உதவியோ வெளிநாட்டு உதவியோ அல்லது மாகாணசபை உதவியோ தேவையில்லை இங்கிருக்கின்ற மாநகரசபையே இங்கிருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் செய்யமுடியும.; இதற்கு வேறு பணம் தேவையில்லை. இங்கிருக்கின்ற மாநகரசபையை இயக்குபவரும் வர்த்தகர்களும் இப்பகுதியை வெளிச்சமுள்ள பகுதியாக ஆக்கலாம். இந்த சிறிய விடயத்தை கூட செய்யமுடியாமல் இருப்பதை விட்டு மனவருத்தம் அடைகிறோம். இங்கு வேலை செய்கின்றவர்கள் ஆகக்குறைந்தது ஒருமாத சம்பளத்தை கொடுத்தாவது ஒரு பத்து மில்லியன் ரூபாவில் இந்த மட்டக்களப்பு மாநகரத்தை மின்குமிழ் ப+ட்டி அழகபடுத்தலாம் என நினைக்கின்றேன.; இருந்தாலும் தேர்தல் காலத்தில் எனது சம்பளத்தை எமது பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை அவர்களிடம் கொடுத்திருந்தேன் அவர்; அந்த பணத்தில்;தான் இப்பாதையில மின்விளக்கு எரிந்ததாக கூறியிருந்தார் நான் இதை குற்றம் கூறுவதாக கூறவில்லை. அனைவரும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற கூறுவோம் செய்யக்கூடிய விடயத்தை நாம் செய்வதில்லை எங்கிருந்தோ வரும் பிரச்சினைகளையும் யாரையாவது பிரச்சினைக்கு இழுப்பதையும் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமான எங்களது பகுதியை துப்பரவாக அழகாக வைத்து கொள்ளக்கூடிய எங்களால் முடிந்த முயற்சிகளில் இறங்கவேண்டும். இங்கு வந்திருக்கின்றவர்கள் புத்திஜீவிகளும் மாவட்டத்தை வடிவமைக்கக்கூடியவர்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி சார்ந்த , அரசியல் ரீதியான வழிகளில் இட்டுசெல்லக்கூடியவர்களும் என்ற வகையில் பேசுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோசப்படுகின்றேன். இங்கு எடுத்துக்கொண்டால் இதுவும் பாட்டாளிபுரம் என்று கூறுவார்கள். இந்த பாட்டாளிபுரம் என்பது பாட்டாளி வர்க்கத்தினர் கடந்தகாலங்களில் இந்த பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர்கூட பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்து கழைத்து இந்தப்பகுதியில்தான் வந்து மது அருந்துவதாக, நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறுவார்கள் இந்த பாட்டாளி தினம் என்பது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தினமாக இருந்தாலும் அதற்கு உலகளவில் விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்கள் 18 மணித்தியாலமாக வேலை வாங்கப்படுவதாகவும், அதனை 8 மணித்தியாலமாக குறைத்து போராட்டம் நடத்தப்பட்டு அதில் உயிர்நீத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் மடிந்தவர்கள் வெற்றியீட்டியதன் காரணமாக கொண்டாடப்படுகின்றது. இது அப்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை கொண்டாடாவிட்டாலும் பத்திரிகை அல்லது இந்த சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கின்றது
எமது பகுதியில் இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் வருமானம் குறைந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தை மறக்கமுடியாத நாளாக நான் பார்க்கிறேன் எனது தனிப்பட்ட வாழ்விலே 1993ம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று என்னால் மறக்கமுடியாது நான் முதல் தடவையாக விடுதலை போராட்டத்தில் இருந்தபொழுது யாழ்ப்பாணதத்pற்கு சென்றிருந்தேன் 1993ம் ஆண்டு இத்தினத்திலே புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆகையால் அந்த நாளை மறக்கமுடியாது. அந்தநாளில் முக்கிய தளபதியாக இருந்து இன்று இங்கு முரண்பட்ட அரசியலும் செய்துகொண்டிருக்கும் முரளிதரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. அதுமட்டுமல்ல அன்றுதான் எமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ அவர்களும் கரும்புலிகளால் வெடித்து கொல்லப்பட்ட தினம் என்ற அடிப்படையிலே எங்களது தனிப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத நாளாக பார்க்கின்றேன் அந்தவகையில் இந்தகட்டடமும் என்னால் கல் நட்டப்பட்டு நினைவில் அழியாத நாளாக பார்க்கின்றேன். எங்கோ இருந்து பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்காகவோ எங்கோ எடுக்கப்பட்ட முடிவுக்கு கொண்டாட்டம் நடாத்துவதும் எங்களது பிரச்சினைகளை முடிப்பதற்கு முடிவுகளை எடுக்காத சமூகமாக இருப்பதை எங்களால் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தலிலே கொண்டாட்ட நாளாக கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாகாணத்தை வலுப்படுத்தவும் ஆளுமைப்படுத்த மாகாணசபைக்கு ஆணை தாருங்கள் என்று பொதுமக்களிடம் ஆணை கேட்டு நின்றோம் நீங்கள் மாறாக எங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எமது மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள். அதற்கான விளைவையும் வாக்களித்த மக்கள் அனுபவிக்க போகின்றீர்கள் காரணம் என்னவென்றால் மத்தியில் அமைந்திருக்கின்ற அரசாங்கம் மிகப்பலமான அரசாங்கமாக அமைந்திருக்கின்றது ஏனென்றால் தமிழர்கள் தமிழ்த்தேசியம் பேசினார்கள் சிங்களவர்ககள் சிங்கள தேசியம் பேசினார்கள் இதன்காரணமாக சிங்களவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் முக்கியமான விடயங்களை அவர்கள் அமுல்படுத்தபோகின்றார்கள். ஒரு உதாரணத்தை உங்களுக்கு நான் சுட்டி காட்டவேண்டும். கடந்தமுறை உள்ள+ராட்சி மறுசீரமைப்பு சட்டமூலம் கிழக்குமாகாணசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்த வட்டார முறையை கொண்டுவருவதற்கும் சிறுபான்மை மக்கள் சிறிதாக பிரிந்து வாழ்கின்ற பகுதிகளில் வட்டாரமாக பிரிந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். இதை கிழக்குமாகாணசபை திருப்பி அனுப்பியிருந்தது மீண்டும் அந்த சட்டமூலத்தை அமுலாக்கி தாருங்கள் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள் கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த முதலமைச்சர் வேறு இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர் வேறு என்பதை நான் மட்டக்களப்பான் என்ற வகையில் நான் கூறியே ஆகவேண்டும். அன்று நான் திருப்பி அனுப்பிய மகஜரை இன்று அமுலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். இதன் காரணமாக வட்டாரமுறை கொண்டுவரப்பபடும் பின்னர் தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்படும் அதன் பின்னர் இன்னும் கணிசமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதை எதிர்ப்பதற்கு எமது மக்கள் எம்மை வலு இல்லாதவர்களாக தள்ளி அனுப்பியிருக்கின்றார்கள் இது வேதனைக்குரிய விடயம் இங்கு வாக்களித்து 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள் இவர்கள் கூறிய வடக்கு கிழக்கு இணைக்கமுடியுமா? இணைத்து தருவார்களா? இதைத்தான் இவர்கள் 50 வருடகாலமாக பெற்றுத்தந்திருக்கின்றார்கள். என்னத்தை கிழித்திருக்கின்றார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. இதில் நீங்கள் மீண்டும் மீண்டும் பிழைகளை விட்டுவிட்டு எமது சமூகத்தின் தலைவிதிகளை கையில் இருக்கின்ற விடயங்களைக் கூட இழக்கின்ற சமூகமாக ஆகப்போகின்ற எமது மக்கள்தான் இதற்கு பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நீங்கள் அளித்த வாக்குகளுக்காக பணி செய்யவேண்டிய மாகாணத்தை பாதுகாத்து கொடுக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் எனக்களித்திருக்கின்றது. அதற்காக நான் பணி செய்வேன் ஏனென்றால் காலம் காலமாக இந்த விடுதலைப்போராட்டம் வளரவேண்டும் தனித்தமிழீழம் எங்களுக்கு தேவையென்று சொல்லிவிட்டு 1976ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தத்தை கீறி பொட்டுவைத்து பிரகடனத்தை செய்துவிட்டு 1977ம் ஆண்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து சபாநாயகருக்கு முன்னால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழ்வோம் என சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பேசுவோம் என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்றால் எமது மாகாணம் வலுப்பெற வேண்டும் எமது சமூகம் வளம்பெற வேண்டும் என்றுதான் ஒரு அரசியல்வாதி சிந்திக்கவேண்டும் அன்று மாற்றுக்கருத்ததுக்களை வேறு வீராப்பு கதைகளையும் பேசிக்கொண்டு இன்னமும் செல்லமுடியாது எனினும் அவர்களை பேசிக்குற்றமில்லை இன்னமம் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் அவர்கள் மீண்டும் தேர்தலில் வாக்கெடுக்கவும் அவர்களின் ஆசனங்களை வைத்துக்கொண்டிருப்பதற்காகவும் அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் மாறாக நாங்கள் அப்படியல்ல அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டும் உழைத்துவிட்டு நாங்கள் கொழும்பில் வீடு வாங்கவேண்டும் என்ற கட்சியுமில்லை. முழுக்க முழுக்க எமது சமூகதத்pற்கு பணிசெய்ய வேண்டும் எமது சமூகத்திற்காக உயிர்கொடுக்கவேண்டும் என்ற மாற்று அரசியலுக்காகவும் கிழக்குமாகாணத்தில் ஒரு ஜனநாயத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அந்த உண்மையை விளங்கிகொள்ளவில்லை என்ற கவலை எங்களுக்குள் புதைந்திருக்கின்றது கடந்தகால தேர்தலில் ஏன் நீங்கள் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று கேட்டிருந்தார்கள் நாங்கள் அரசாங்கத்தோடு வெற்றிலை சின்னத்தில் கேட்டிருந்தால் இந்த முதலமைச்சர் ஆசனத்தை பெற்றுக்கொண்டோம் இல்லையென்று கூறவில்லை இந்த தேர்தலில் வெற்றிலையில் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கவேண்டும் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கும் மகிழ்ச்சியான விடயம் கொழும்பை பொறுத்தவரைக்கும். இந்த கிழக்குமாகாணசபை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பட்ட சமூக நல்லுறவு சமூக இணக்கப்பாடெல்லாம் குலைந்திருக்கும் என்ற உண்மையை நீங்கள’; விளங்கிகொள்ளவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கேட்டிருந்தால் மட்டக்களப்பில் ஒருகாலமும் நடக்காத நிகழ்வு நடந்திருக்கும் எங்களது வாக்கை வைத்து வந்திருக்கும் ஹிஸ்புல்லா அங்க அமீர் அலி ஏறாவூரில் அலிஸாகிர் மௌலானா வந்திருப்பார்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பசீர் சேகுதாவூத் வந்திருப்பார் ஒருகாலத்திலும் நடக்காத நிகழ்வு நடந்து நான்கு முஸ்லிம் எம்பிக்கள் வந்திருப்பார்கள் எங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையுமில்லை சமூகம் அடிபட்டிருக்கும் காரணம் என்ன நூறுவீத மக்களில் இருபத்தைந்துவீத முஸ்லிம்களும் எழுபத்தைந்துவீத தமிழர்களும் வாழ்கின்றார்கள். காலத்தால் நடக்காத தவறை இங்கு வந்திருக்கும் முதலமைச்சரோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தனித்துவமாக நின்றோம் முஸ்லிம் வேறு அரசியல் வேற என்று கூறவில்லை இனத்துவேசம் பேசவில்லை உரிமையென்னும்போது ஒரு சமூக உரிமையை பாதுகாக்கும் விடயம் ஒரு அரசியல்வாதிக்குள்ளது. சமூகம் சார்ந்த அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்கின்ற அடிப்படையில் அரசியல் செய்தோம் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும் கடந்தகாலத்தில் மட்டக்களப்பு மக்கள் பெரும்பிழை விட்டார்கள் யாழ்மக்கள் ஆளும் கட்சியில் மூன்றுபேரை அனுப்பியிருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று கூச்சலிடவும் ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள். கூச்சலிடுபவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருப்பார்கள் இங்க வந்திருக்கின்ற யோகேஸ்வரன் ஐயா என்ன செய்யப்போகின்றார் இங்கு வந்திருக்கின்ற அரியநேத்திரன் என்ன செய்யப்போகின்றார் கடந்தமுறை பாராளுமன்றம் வந்திருந்தார் இந்தமுறையும் வந்திருக்கின்றார் அவர் சாகும்வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என நினைக்கின்றேன் ஆகையால் இங்கு சுயநிர்ணய உரிமையையோ வடக்கு கிழக்க இணைப்பையோ செய்து தரமுடியாது அரசாங்கம் அவர்களை கூப்பிட்டுபேச எந்தவிதமான அருகதையும் இல்லாதவர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். கடந்தகாலங்களைப்போல் இன்னமும் சிங்கள பேரினவாதம் என்று பேசிப்பேசி இருக்கின்றவர்கள் பின்னால் இழுபட்டால் நாங்கள் இருக்கின்றோமா இல்லையோ என்று தெரியாது இருக்கின்றதையும் இழந்த சமூகமாக இருக்கின்றதையும் இல்லாமல் தொலைத்த சமூகமாக மீண்டும் மாவட்ட அட்சிமுறையை கொண்டு திணித்த சமூகமாக மாறுவீர்கள் என்ற உண்மையை சொல்லி எதிர்காலத்தில் நடந்த தவறுகளை மறந்து உண்மையான அரசியல் தெளிவுள்ள சமூகமாக மாறவேண்டும் அரசியல் ரீதியாக நீங்கள் சிந்திக்கவேண்டும் மாறாக எங்கிருந்தோ எழுகின்ற வடபகுதியை மாத்திரம் தலைமைத்துவங்களை வைத்துக்கொள்கின்ற பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இழுபட்டு நீங்கள் அழியக்கூடாது. உங்களது பிரச்சினை உங்களது சமூகப்பிரச்சனை உங்களுக்கும் பிரச்சினை என்ற ஆழமான அரசியல்பார்வை உள்ள அரசியல் சமூகமாக மாறவேண்டும் என்று வண்மையாக கேட்டுக்கொண்டு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகூறி முடிக்கின்றேன் நன்றி வணக்கம் .

அபிவிருத்தியின் முக்கியத்துவம் இனி எல்லைக்கிராமங்களுக்கே- கிழக்கு மாகாண முதலமைச்சர்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக விளங்குகின்ற வடமுனை கிராமத்திற்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அங்குள்ள பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எல்லா வகையான துன்பங்களையும் தாண்டி வந்து நாம் ஓர் ஆரம்பப்புள்ளியில் இருக்கின்றோம். இனிமேல்த்தான் நாம் தொடர்ந்து எமது வாழ்க்ககையின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எமது சமூகத்தினது அபிவிருத்திகள் பற்றி பேசுவதற்கான சூழல் தற்போதுதான் உருவாகி இருக்கின்றது. இதை எமது மக்;கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் உறுதியான ஓர் அரசியல் தலமைத்துவத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும். இன்று கிழக்கு மாகாணத்திலே அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்துறை சார்ந்த அபிவிருத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதனை யாரும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின் அதிக பணிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதற்கு இவ் வடமுனை, ஊத்துச்சேனை கிராமங்கள் விதிவிலக்கல்ல எனவும் குறிப்பிட்டார்.
நெக்டெப்பின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வடமனை பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் இவ் வடமுனைக்கிராமம் ஓர் எல்லைக் கிராமமாக இருப்பதன் காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு இக்கிராமம் முன்னெடுக்க வேண்டி நேரிடும். அதாவது எல்லைப்பிரச்சனை, காணிப்பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகும். எனவே இனி வருகின்ற காலங்களில் நாமே எமது சமூகத்தை பலமாக்குவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அரசியல்வாதி என்ற ரீதியிலும், மட்டக்களப்பான் என்ற ரீதியிலும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் குறிப்பிட்டார். தோடர்ந்து பேசுகையில் எனது நிதி ஒதுக்கீட்டிலே அதிகமான நிதிகளையும், வேலைத்திட்டங்களையும் எல்லைக்கிராமங்களுக்கே முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.
இக்கிராமத்தை பொறுத்த வரையில் முக்கிய பிரச்சனை குடிநீhப்பிரச்சனை மற்றும் வீடு இன்மை,போக்குவரத்து, மின்சாரம், தபால்சேவை மற்றும் கல்வி இவை அனைத்தையும் நான் மிகவும் அதிக அக்கறை கொண்டு செய்த தருவதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். நான் ஏற்கனவே ஒதுக்கிய 75 இலட்சம் ரூபாய்க்கும் இவ்வேலைத்திட்டங்களை செய்ய முடியாது எனவே இனி வருகின்ற நிதி ஒதக்கீட்டில் இவற்றிற்கு அதி முக்கியத்துவம் கொடத்து நான் இதனால் செய்து தருவேன் எனவும் குறிப்பிட்ட அவர் இக் கிராமத்திற்கு இதுவரை வீட்டுத் திட்டம் எதுவும் வரவில்லை எனவே இவ் ஆண்டு வருகின்ற விட்டுத்திட்டத்தினை நான் வடமுனைக் கிராமத்திற்கு ஏற்படடுத்தித் தருவேன் எனவும் குறிப்பிட்டார். இப்பாடசாலையின் அதிபர் ஜீவநாதன். தலமையில் இடம் பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவிற்கு கிழக்குமாகணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கல்குடாவலயக்கல்விப்பணிப்பாளர். சுபாசக்கரவத்தி,கல்விப்பிரிவின் பொறியியலாளர். கிருஸ்ணதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் வாகைப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகள்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேசத்திற்கு அதிகளவு நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளார். ஆதனடிப்படையில் சகலதுறை சார்ந்த அபிவிருத்திப் பணிகளுக்காகவும் சுமார் 75 மில்லியன் ரூபாய் விசேட நிதியினை தாம் இவ் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கிடு செய்துள்ளார்.
அனைத்து வகையிலும் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற வாகரைப் பிரதேசத்தின் கல்வி நீர்ப்பாசனம், விவசாயம், சமூக அபிவிருத்தி வீதி அபிவிருத்தி நிர்வாகம் எனப் பல துறைகளுக்குமாக மேற்படி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று (05.05.2010) வாகரைப் பிரதேசத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் குறித்த துறைசார்ந்த அபிவிருத்தி பணிகளுக்கான திணைக்களங்களுக்கு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்குள் அனைத்த அபிவிருத்திப் பணிகளும் நிறைவடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அபிவிருத்திப் பணிகளில் சில.
நீர்ப்பாசனம்:- கட்டுமுறிவு வாய்க்கால் புனரமைப்பு - 01 மில்லியன்.
விவசாயக்கிணறு - 0.35 மில்லியன்.
பால் சேகரிப்பு நிலையம் வாகரை. - 1.5 மில்லியன்.
ஆடு வினியோகம். - 1.5 மில்லியன்.

தட்டமுனை பாடசாலை - 7.5 மில்லியன்.
பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கு அமைத்தல். - 1.5 மில்லியன்.
கட்டுமுறிவு அ.த.க பாடசாலை விளையாட்டு மைதானம் அமைத்தல். - 0.5 மில்லியன்.
பொது விளையாட்டு மைதானம் அமைத்தல் மாங்கேணி - 2.5 மில்லியன்.
பொது விளையாட்டு அரங்கு அமைத்தல் வாகரை. - 03 மில்லியன்.
பொது மலசல கூட வசதி கதிரவெளி பொது நூலகம். - 0.11 மில்லியன்.
கொங்கிரீட் வீதி பால்சேனை பெரிய சாமி கோவில் வீதி – 1200 மீற்றர். - 13 மில்லியன்.
கிறவல் வீதி (புதூர் வீதி- கதிரவெளி – 1300மீற்றர்) - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – மாங்கேணி – 300மிற்றர்) - 0.5 மில்லியன்.
சந்தை வீதி – புச்சாக்கேணி - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – கிரிமிச்சசை. - 0.5 மில்லியன்.
குறுக்கு வீதி சல்லித்திவு. - 0.5 மில்லியன்.

கிராம மட்ட அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டுமொரு புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது-நாமல் ராஜபக்ஷ

நாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள் தான் வாழ்ந்தார்கள்.
இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.
பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.
குறிப்பாக §சேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.
1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித் திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மும்பையின் மிக பிரபல்யமான இடங்களை இலக்கு வைத்து லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல்களின் போது சுமார் 174 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு பிரிவினர் அஜ்மல் கஸாப்பை மாத்திரமே உயிருடன் பிடித்திருந்தனர்.
குறித்த அமைப்பின் ஏனைய தீவிரவாதிகள் பாதுகாப்பு பிரிவினரின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒன்றறை வருடங்களாக மும்பை நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அவருக்கான தண்டனை நாளைய தினம் வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு இந்தியர்கள் இன்றைய தினம் மும்பை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய அஜ்மல் கஸாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலி.

பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வாகன சோதனைச் சாவடியில், போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து, மோதி வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பாதுகாப்புப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் -பிரபா கணேசன்.

ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபா கணேசன் , தேசியப் பட்டியல் பாராளுன்ற உறுப்பினர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளதுடன் , இதன் பிரகாரம் அம்முன்னணியிலிருந்து வெளியேறி தான் பாராளுமன்றில் சுயேட்சையாக செயல்படபோவதாகவும் , எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.அதேநேரம் நுவரேலிய மாவட்டதிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள திகாம்பரம் அவர்களும் பாராளுமன்றில் சுயமாக இயங்கப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசுக்கும் எமது கட்சிக்கும் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்த சில ஊடகங்கள் சதி - முதலமைச்சர் சந்திரகாந்தன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலிலே எமது கட்சியின் உயர்மட்டம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே நாம் தனித்து போட்டியிட்டோம். இதனால் எமக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை. தொடர்ந்து நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து கிழக்கின் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

நவீன மயப்படுத்தப்படவுள்ள மட்டு பேருந்து நிலையம் -கிழக்கு முதல்வர் நடவடிக்கை.


மட்டக்களப்பு பொது பேருந்து நிலையம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் நிமித்தம் மஹிந்த சிந்தனையின் நெக்டப் வேலைத்திட்டத்தின் கீழ் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும், 01।05।2010 அன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.








இங்கிலாந்து நாட்டு கோடீசுவரர்களில் முதல் இடத்தில் லட்சுமி மிட்டல்..!

இங்கிலாந்து நாட்டு கோடீசுவரர்களில் இந்த ஆண்டும் முதல் இடத்தை இந்தியரான லட்சுமி மிட்டல் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 6-வது ஆண்டாக அவர் தொடர்ந்து இங்கிலாந்து கோடீசுவரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தகவலை இங்கிலாந்து நாட்டு சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதோடு இங்கிலாந்தில் ஆயிரம் கோடீசுவரர்கள் இருப்பதாகவும், அது பட்டியலிட்டு உள்ளது.லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் பிறந்த சுரங்கத் தொழில் அதிபர் அனில் அகர்வால் 60 இடங்கள் முன்னேறி 10-வது இடத்துக்கு வந்து இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 3 ஆயிரம் கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.இங்கிலாந்து ராணி எலிசபெத் இங்கிலாந்து நாட்டு பணக்காரர்களில் 245-வது இடத்தில் இருக்கிறார். அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 100 கோடி ரூபாய் உயர்ந்து உள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 1450 கோடி ரூபாய் ஆகும்.

நித்யானந்தா பெண் சீடர்களிடம் போட்ட ஒப்பந்தம்


பிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு

பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.பிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்

நித்யானந்தா ஆசிரம சீடர்கள் உடையில் அதிரடி மாற்றம்..!

நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறிவிட்டது. அங்கு இருந்த ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்கு பதிலாக சுடிதாரிலும், பேன்ட்-டி சார்ட்டிலும் வலம் வருகிறார்கள்.பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவிடம் சீடர்களாக உள்ளனர். நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகும், அவரது சீடர்கள் பலர் ஆசிரமத்திலேயே தங்கி உள்ளனர்.நித்யானந்தா கைது செய்யப்படுவதற்கு முன்பு பிடதி ஆசிரமத்தில் தினமும் தியான வகுப்புகள், யோகா வகுப்புகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறும். மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், வி.ஐ.பி.க்கள் என்று பலர் வந்து நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சென்றார்கள்.ஆனால் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறப்பட்ட பிறகு ஆசிரமத்துக்கு யாரும் வருவதில்லை. முன்பு ஆசிரமத்தில் தங்கி இருந்த நித்யானந்தாவின் சீடர்கள் காவி உடைந்து வலம் வரும்போது, அது ஒரு மடம் போல் காட்சி அளித்தது. தற்போது பிடதி ஆசிரமம் களை இழந்து காணப்படுகிறது.அப்போது ஆசிரமத்தில் இருந்த நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும்தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு கல்லூரி மாணவர்கள் போல் பேன்ட்-டீசர்ட் அணிந்து வலம் வருகிறார்கள். இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக வண்ண, வண்ண சுடிதார்களில் கல்லூரி மாணவிகள் போல் ஆசிரமத்தை சுற்றி வருகின்றனர். நித்யானந்தாவின் கைதுக்கு பிறகும், அவரை பற்றி தொடர்ந்து வரும் செக்ஸ் புகார்களை தொடர்ந்து சீடர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றி

பல்கேரியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்கேரிய வீரர் வெசலின் டோபலோவை இரண்டாவது ஆட்டத்தில் வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
12 ஆட்டங்கள் கொண்ட இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது இருவரும் 1- 1 என்று சமநில வகிக்கின்றனர்.
ஆனந்த் இதில் ராணி, சிப்பாயுடன் நகர்த்தலைத் துவங்கினார். இது சிக்கலான ஒரு துவக்க என்பதால் இரு வீரர்களின் நகர்த்தலும் எந்த ஒரு கூடுதல் நன்மைக்கும் இட்டுச் செல்லவில்லை.
முதலில் சிப்பாய் ஒன்றை வெட்டுக் கொடுத்தார் ஆனந்த். ஆட்டம் அப்போது டோபலோவ் சார்பாக இருந்தது. ஆனால் 15-வது நகர்த்தலில் திடீர் திருப்பமாக இருவரும் தங்களது ராணிகளை பரஸ்பரம் வெட்டிக் கோண்டனர்.
இதன் பிறகு ஆனந்த் சில எதிர்பாராத நகர்த்தல்களைச் செட்ய்தார். ஆனால் ஆட்டத்தின் 25-வது நகர்த்தலில் ஆனந்தின் பிஷப்பை தன் குதிரையை கொண்டு காலி செய்ய டோபலோவ் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைய ஆனந்தின் ஆட்டத்தில் வேகம் பிறந்தது.
அதன் பிற்கு ஆனந்தின் கட்டுப்பாடு ஆட்டத்தில் அதிகரிக்க டோபலோவ் வெறுப்படைந்தோ அல்லது தன் ஆக்ரோஷத்தைக் காண்பிக்கவோ 29-வது நகர்த்தலில் எப்படியாவது ஆனந்தின் யானையை காலி செய்ய முயன்றார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
கடைசியில் ராணி இல்லாத நிலையில் யானைகள்,குதிரை, பிஷப் ஆகியவற்றை கன கச்சிதமாக நகர்த்தி டோபலோவ் பகுதிக்குள் புகுந்து கடும் நெருக்கடி கொடுக்க, டோபலோவ் தனது காய்களை நகர்த்த முடியாமல் கட்டிப் போடப்பட்டார்.
கடைசியில் 38-வது நகர்த்தலில் டோபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

நள்ளிரவில் லலித்மோடி சஸ்பெண்ட் : பிசிசிஐ அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளது. இதற்கு காரணமான லலித் மோடியை ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனைய தொடர்ந்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில், லலித்மோடி கலந்து கொள்வதை தடுப்பதற்காக, இறுதி போட்டி முடிந்ததும், நேற்று நள்ளிரவு அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தி வரும் 20/20 கிரிக்கெட் போட்டியில் பல ஆயிரம் கோடி பணம் புரள்கிறது. கொச்சி அணி ஏலம் விடப்பட்ட விவகாரத்தில் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கும், வெளியுறவு இணையமைச்சர் சசி தரூக்கும் இடையே நடந்த மோதலில் தரூரின் பதவி பறிபோனது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பி உள்ளது. மக்களவையில் நேற்று இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.ஐ.பி.எல் கொச்சி அணி ஏலத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் தலையிட்டதாகவும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக பெற்றுத்தந்தார் எனவும் டுவிட்டர் இணையளத்தில் தகவல் வெளியிட்டார் லலித் மோடி. இந்த விவகாரம் பார்லிமென்ட்டில் பூதகரமாக வெடித்தது. இதனால், லலித்மோடியை பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியது. இதையடுத்து வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சசிதரூர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நிலவுகிறது, கருப்பு பணம் விளையாடுகிறது என புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சகம் கூறியது. முதலில் லலித்மோடியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியது. பின் நாடு முழுவதும் 8 முக்கிய நகரங்களில் உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர். லலித் மோடிக்கு 3 அணியில் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்ச்சையை ஆரம்பித்த லலித்மோடியே சர்ச்சையில் சிக்கியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், விளக்கம் அளிக்க 5 நாள் அவகாசம் வேண்டும் என கேட்டார் லலித் மோடி. 'ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் நான்தான். எனக்கு தெரியாமல் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதம் என்றும், முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கிப் பாருங்கள்' என்றும் கூறினார். இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென, இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பேன் என லலித்மோடி நேற்று மாலை அறிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில், 'ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. அப்போது, புகார்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சஷாங் மனோகர், நிர்வாகிகள் சீனிவாசன், ரத்னாகர் ஷெட்டி, நிரஞ்சன் ஷா ஆகியோர் நேற்று மாலை ரகசிய ஆலோசனை நடத்தினர். ஐ.பி.எல் சீசன்&3 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி மும்பையில் நேற்று இரவு நடந்தது. போட்டி முடிந்ததும், லலித் மோடிக்கு, பி.சி.சி.ஐ. சஸ்பெண்ட் நோட்டிஸ் அனுப்பியது. இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் லலித்மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

16வது சார்க் உச்சி மாநாடு

16வது சார்க் உச்சி மாநாட்டிற்காக பூட்டான் நாட்டின் திம்பு நகர் தயாராகி வருகின்றது. திம்புவிலுள்ள பிரதான வீதியின் இரு மருங்கிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எட்டு நாட்டுத் தலைவர்களதும் வர்ண புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

மெக்அஃபி ஆன்ட்டி வைரஸ் கணினிகளை முடக்கியது


கணினி பாதுகாப்புக்கு சிறந்த ஒன்று என்று பெயர் வாங்கிய மெகாஃபி ஆன்ட்டிவைரஸ் இவ்வாரத்தில் புதிய அப்டேட் ஒன்றின் போது தனதுவாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலை உருவாக்கிவிட்டதற்காகமன்னிப்பு கேட்டிருக்கிறது.அப்டேட் செய்யப்பட்ட புதிய டாட் ஃபைல் ஒன்றின்காரணமாக பள்ளிகள் , மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என இந்தஆன்ட்டி வைரைஸை பயன்படுத்தும் பலர் இதனால் கடுமையாகபாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.விண்டோட்ஸ் எக்ஸ் பி கணினிகள் இதனால் க்ராஷ் ஆகுவதும் மீண்டும்மீண்டும் ரீ பூட் ஆகுவதுமாக இருந்திருக்கின்றன. SVCHOST.EXE என்கிறவிண்டோஸ் கோப்பை தவறான வைரஸ் என்று ஆன்ட்டி வைரஸ் கணக்கில் எடுத்தால்நிகழ்ந்த தவறை நிவர்த்தி செய்ய சூப்பர் டாட் ரெமிடேசன் டூல் என்ற ஒன்றைஉடனடியாக தயார் செய்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தளத்தின் உதவியைநாடியதால் வேறு ஒரு தனித்தளத்தில் எவ்வாறு கணினிகளை மீட்டெடுக்க வேண்டும்என தகவல்களை பதிவிட்டது.தவறு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே விரைவாக சரிசெய்யப்பட்டிருந்தாலும் இதுநிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கக்கூடிய செயலாகும். பாதிக்கப்பட்டகணினிகளான விண்டோஸ் எக்ஸ்பி எஸ் பி த்ரீ மாடல்ககளின் மீது தங்கள் புதியகோப்பை பரிசீலிக்காமல் விட்டதால் தவறு நிகழ்ந்ததாக கூறி இருக்கிறார்கள்.சன் பெல்ட் மென்பொருளாளர்கள் மெகஃபியின் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைகவர ஆறுமாத இலவச பாதுகாப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால்அவர்களூம் இதுபோன்ற தவறுகள் நிகழாது என உறுதி கூறமுடியாது.

பழைய குருடி கதவ திறடி-ஆனந்த சங்கரி.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டவுடன் அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத வகையில் கருத்துக்களை வெளியிடுவது பழைய குருடி கதவ திறடி என்பது போல உள்ளதாகவும், தாம் தனி ஈழக் கொள்கையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் ஓர் ஊடகத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது வடக்கில் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெறவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மிக அடக்குமுறையான விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகவும், தமது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒழுங்கான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட களத்தில் நிற்க அனுமதிக்க வில்லை எனவும் அதன் காரணமாகவே தமது கட்சி ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிநேகபூர்வ சந்திப்பு

முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிநேகபூர்வ சந்திப்பும், அவர்களின் விடுதலை தொடர்பாக உயர்பீடங்களுடன் பேச முடிவு.முதல்வரை முன்னாள் போராளிகள் கைதட்டி வரவேற்பும், தங்களை முதல் முதல் வந்து பார்வையிட்ட ஓர் அரசியல்வாதி தாங்கள் தான் எனவும் நன்றி தெரிவிப்பு.



கிழக்கு மாகண முதலமைச்சர் மயிலம்பாவெளி ஆலய விஜயம்.(படங்கள் இணைப்பு)








மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற மிகப்பிரமாண்டமான காமாட்சி அம்மன் ஆலயயத்தினை ஆலய நிருவாகிகளின் அழைப்பிற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று பாரர்வையிட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.




கிழக்கு தமிழ் மக்கள் எமது கட்சியை தூக்கி எறியவில்லை, கட்சித்த தலைவர் சி.சந்திரகாந்தன்.


நடைபெற்று முடிந்த 7வது பாரர்ளுமன்ற பொதுத் தேர்தலிலே கிழக்கு மாகாணத்திலே எமது கட்சி கிட்டத்தட்ட 23500 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. நாம் எதிர் கொண்ட முதலாவது தேர்தலிலே இவ்வளவு பெருந் தொகை வாக்கு எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இதனடிப்படையில் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எமது கட்சியினை தூக்கி எறியவில்லை என த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலா மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலை நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் தற்போது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்று ஆசனங்களும் அம்பாறையில் ஒரு ஆசனமும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமாக மொத்தமாக ஐந்து ஆசனங்கள் பெற வழிவகுத்திருக்கின்றார்கள் இவ்வாறு வாக்களித்த மக்களுக்காக இத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏதாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கில் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு அதிகப்படியான சேவைகளை வழங்க வேண்டும். 6வது நாடாளுமன்ற தேர்தலிலே 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு எதனையுமே செய்யவில்லை ஆனால் தற்போது வெறுமனே 14 ஆசனங்கள்தான் கிடைத்திருக்கின்றது இதனை வைத்துக்கொண்டாவது ஏதாவது நடைமுறைச்சாத்தியமான விடயங்களைப் பற்றி பேசி எமது மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவர இவர்கள் உழைக்க வேண்டும் அவ்வாறு செய்வார்களாக இருந்தால் கிழக்கில் உள்ள ஓர் தமிழ் கட்சியின் தலைவர் என்ற வகையில் நான் முதலில் மகிழ்ச்சியடைவேன் எனவும் குறிப்பிட்டார்.ஓட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்திலே 23அயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் எமது கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலிலே 43 ஆயிரத்திற்கு மேல் எனக்கு வாக்களித்து முதலமைச்சராக்கி இருக்கின்றார்கள் எனவே இம்மக்களுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். வாக்களித்த மக்கள் மாத்திரமன்றி கிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு மிகவும் அழகானதும் அனைத்து துறைகளிலம் சிறந்த ஓர் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற நான் முழுமையாக பாடுபடுவேன். ஆதற்கு எமது மக்கள் பூரண ஆதரவினை இனிவருகின்ற காலங்களில் வழங்க வேண்டம் எனக் கேட்டுக்கொண்டார்.

காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்.
காலங்காலமாக தமிழ் மக்களின் அரசியல் இருப்பின் சொந்தக்காரர்கள் என தங்களை இனங்காட்டிக் கொண்டு காலத்தை கடத்திய வரலாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்குரியது. அன்றும் சரி இன்றும் சரி இக்கூட்டமைப்பினது அரசியல் பிரவேசமானது தமிழ் தேசியத்தின் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. ஆனால் அது எமது தமிழ் மக்களுக்கு கற்பனைக்குக் கூட எட்டாததாக ஒன்றாக இருக்கின்றது. அதனையே இவர்கள் அடைய முயற்சிககிறார்கள். போராட்ட காலங்களில் தனித் தமிழீழம் என்றார்கள், இன்று வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்றார்கள். இதே போன்று பல அடைய முடியாத இலட்சியங்களுக்காய் காலங் காலமாக குரல் கொடுப்பவர்கள்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15.04.2010) இரவு மட்டக்களப்பு வாடிவீட்டில் இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தமது கட்சி எதிர் கொண்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலே குறிப்பிட்டளவு வாக்கினை பெற்றிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் தற்போதைய இந்த ஜனநாயகச் சூழலில் நாம் கிழக்கில் பாரியளவு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றோம். அவ்வாறு இருந்தும் கூட எதுவுமே எமது மக்களின் நலன்களில் பங்கெடுக்காத கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் மீண்டும் ஆணை வழங்கியிருப்பது ஓரளவு வேதனையளிக்கின்றது. இவர்களால் கிழக்கு மாகாண மக்களுக்கு எதுவுமே செய்ய இயலாது. மீண்டும் அவர்கள் தனித் தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பு என நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையே பேசிப் பேசி காலத்தை கடத்துவார்களே தவிர, வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் அவர்கள் எமது மக்களுக்குச் செய்ய மாட்டார்கள் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக நாம் ஓர் விடயத்தினை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதாவது தற்போது கூட்டமைப்பின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயற்படுகின்ற சில தமிழ் ஊடகங்கள் வடக்கு கிழக்கு இணைப்பினை முதன்மை படுத்தி தமது பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கும் கூட்டமைப்பினருக்கும் நான் ஓர் விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தேர்தலை ஓர் பரீட்சாத்தமான தேர்தலாக நோக்குவோமாயின், அதாவது வடக்கு கிழக்கு இணைப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு தேர்தலாக இதனை நோக்குவோமாயின் கூட மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக 994இ612 பேர்உள்ளனர். இதில் மட்டக்களப்பில் 333இ644 பேரும், திருகோணமலையில் 241இ133 பேரும் அம்பாறையில் 420இ835 பேரும் இருக்கின்றார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 66235 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் திருகோணமலையில் அண்ணளவாக 28892 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் (முழுமையான தேர்தல் முடிவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அம்பாறையில் 26895 வாக்குகளை பெற்று ஒரு ஆசனமாக மொத்தமாக ஐந்து ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலே மொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 120922 ஆகும். எனவே கிழக்கில் இருக்கின்ற மொத்த தமிழர்களிலே இவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களை வைத்து ஒப்பிடும்போது கூட தெளிவாக விளங்குகின்றது வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கான ஆணை இதுவென அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் விகிதாசார ரீதியாக ஒப்பிட்டு நோக்குகின்ற போது த.தே.கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கின்ற விகிதாசாரம் 12.14ஆகும். எனவே இதனை வைத்துக் கொண்டு இவர்கள் குறிப்பிடமுடியாது. எனவே இதனை அனைத்து சமூகமும் தெளிவாக சிந்தித்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாணம் வடமாகாணத்தைப் போல் தனியான தமிழ் பிராந்தியம் அல்ல. மாறாக தமிழர்கள், சிங்களவர்கள் ,முஸ்லிம்கள் என மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்ற மாகாணம் ஆகும். ஆகவே மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற வாக்காளர்கள் தொகை 995612 பேராகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்ற வாக்ககள் வெறுமனவே 120922 ஆகும். எனவே இந்த விகிதாசார அடிப்படையில் பார்த்தால் கூட அவர்கள் சொல்வதனைப் போன்று வடகிழக்கு இணைப்பிற்கான ஆணை கிடைக்க வில்லை. இவர்கள் பல நெடுங்காலமாக இவ்வாறாக அடைய முடியாத இலக்குகளை அடைவதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படத்திய வரலாறுகள் எமக்கு தெரிந்தவைகளே. எனவே தற்போது முடிவடைந்திரக்கின்ற தேர்தல் முடிவினை வைத்துக் கொண்டு த.தே.கூட்டமைப்பும் அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயற்படுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் ஊடகங்களும் வடகிழக்கு இணைப்பு தொடர்பாக கதைப்பதற்கு தகுதி அற்றவர்களே என்பதனையே தெளிவாக நான் எடுத்துக் கூறுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்டுகையில், ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண வேண்டும் எனக்கூறும் இத் தேசிய கூட்டமைப்பினர், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையே ஏற்காதவர்களாகச் செயற்படுகின்றமை மிகவும் வேதனையளிக்கின்றது. அதாவது வடக்கு கிழக்கு நிருவாக ரீதியாக பிரிக்கப்படுகின்றது என்கின்ற தீர்ப்பினை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத இக் கூட்டமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது எவ்வளவு வேடிக்கை என்பதனை அனைத்து அரசியல் ஆர்வலர்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச தீர்வு என்றால் அது மாகாண சபை முறைமைதான். மாகாண சபை முறைமை கிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதே போல் வடக்கிலும் ஏற்படுத்தப்படுமாயின் ஓர் தமிழர் முதலமைச்சராக வரமுடியும். எனவே அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் ஓங்க இவை வழிவகுக்கும். இதனை எல்லாம் லிடடு விட்டு வடக்கு கிழக்கு இணைப்புத்தான் இன்று எமது தமிழ் மக்களுக்கான தீர்வு என இக் கூட்டமைப்பினர் கூறுவது ஒருபுறம் வேதனையளித்தாலும், அது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் நடக்க முடியாத ஒன்றாகும். நான் ஏற்கனவே கூறியது போல கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடந்தால் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற வாக்குகளின் பிரகாரம் பார்க்கின்ற போது அது நடக்கமுடியாத ஒன்றாகும். இவர்களது இவ்வாறான பேச்சுக்கள் மூலம் ஒன்று மட்டும் புலனாகின்றது அதாவது தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மக்களின் அரசியல் ஏகபிரதிநிதிகள் அவர்களே காலங் காலமாக இருக்க வேண்டும் என்பததான் அவர்களினது எண்ணப்பாடாகும். கிழக்கில் நிலையான அரசியல் தலைமை உருவாவதனை அவர்கள் விரும்பவில்லை என்பது எனது எண்ணப்பாடாகும். இதனூடாக நான் பிரதேசவாதம் பேசவில்லை. காலங்காலமாக எமது மக்களை இவ்வாறாகத்தான் இந்த த.தே.கூட்டமைப்பினரும் அதன் அரசியல் தலைமைகளை வழிநடத்தியிருக்கின்றார்கள். இதனை எல்லாம் இனிவரும் காலங்களிலாவது குறிப்பாக எமது கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் செயற்படுகின்ற தமிழ் ஊடகங்களை நினைத்தால்கூட மிகவும் கவலையளிக்கின்றது. அதாவது எந்த ஒரு நடுநிலைத் தன்மையும் பேணாது உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தாது குறிப்பிட்ட ஒரு சில தமிழ் ஊடகங்களில் இத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏவலாளிகள் போல் செயற்பட்டு தங்களது செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற போது மக்கள் குழப்பமடைகின்றார்கள். எனவே இது போன்ற செயற்பாடுகளை இனிவருகின்ற காலங்களிலாவது நிறுத்தி பத்திரிகை தர்மத்தினை பேணி நம்பகத் தன்மையானதும் யதார்த்தபூர்வமான உண்மைகளையும் கட்சி பேதங்களுக்கு அப்பால் வெளியிட்டு எமது மக்களையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்த இவ் ஊடகங்கள் செயற்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். விசேடமாகச் சொல்லப்போனால் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரத்திற்குள் வெளிவந்த குறிப்பிட்ட சில பத்திரிகைச் செய்திகளை எடுத்துப்பார்த்தால் நான் ஏலவே குறிப்பிட்ட விடயங்கள் புலனாகும். தலைப்பு செய்திகள் கூட விதிவிலக்கல்ல.
எனவே இத் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வாதிகளுக்கும் அவ் அரசியல் தலைமைகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வளவு காலமும் எமது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் போதும் இனிவரும் காலங்களிலாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழி சமைத்துக் கொடுங்கள். ஏலவே 22 பாரர்ளுமன்ற உறுப்பினர்களை வைத்து எதையுமே சாதிக்கவில்லை தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஏதாவது செய்ய முயற்சியுங்கள் எனவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்,நகைச்சுவை.

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால், நிறுவனர் கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
நன்றி இணையத் தமிழ் உலகம்.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 67 பேர் பலி


சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குறைந்தது 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தெரிகிறது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.குவின்காய் மாகாணத்தின் ஜீகூ நகரில் இருந்து 30 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அவரிடம் கை குலுக்கி 5 நிமிடங்கள் பேசினார்.அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்காக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சியில் சற்று தள்ளி இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அமர்ந்திருந்தனர்.அப்போது கிலானி தனது இருக்கையிலிருந்து எழுந்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி வந்தார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் புனமுறுவலுடன் வரவேற்றார். இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு 5 நிமிடங்களே நீடித்தது

புதுவருட நல்வாழ்த்துக்கள்.


விருத்தியை பார்வையிடும் அனைத்துலக நண்பர்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்.
viruththy.blogspot.com

கிழக்கு மாகாண முதலமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி


மலர்ந்திருக்கின்ற தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டில் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். முப்பது வருடகாலம் அனைத்துத்துறைகளிலுமே பின்நோக்கிச் சென்றிருந்தோம். ஆனால் இன்று அவை அனைத்திலும் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இன ஐக்கியத்தோடு கூடிய அபிவிருத்தியினை நாம் அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
இன்று மலர்ந்திரக்கின்ற இச் சித்திரைப் புத்தாண்டினை அனைவரும் மிகவும் மனநிறைவுடன் கொண்டாடி மகிழ்ந்து, எதிர்காலத்தில் எமது நாடு அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி அடைவதற்கு இலங்கை பிரஜைகள் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும் எனக் கேட்டக்கொள்கின்றேன். மேலும் இனமத பேதங்களைக் கடந்து நல்லுறவுடன் கூடிய அரோக்கியமான ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப இச் சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் வழி வகுக்கும் எனக் கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

பேருந்து ஓட்டுனர்களால் புறக்கணிக்கப்படும் மாணவர்களும் பாதிக்கப்படும் கல்வியும்.


எமது நாட்டை பொறுத்தவரையில் ஒரு வளர்முக நாடாக இருப்பினும் கல்வியில் சிறந்த நாடாக காட்டப்படுகின்றது. எமது நாட்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் பெரும்பாலான அனைவரும் கல்வி கூடங்களுக்கு செல்வதற்காக பேருந்துகளையே நம்பி இருக்கின்றமை யாரும் மறுக்க முடியாத விடையமாகும், ஆனால் எமது அரச பேருந்து ஓட்டுனர்களும் சரி தனியார் பேருந்து ஓட்டுனர்களாக இருப்பினும் சரி மாணவர்களை அவர்களின் எதிர்கால கல்வி அபிவிருத்திக்காக தாம் ஒரு சிறு துளியேனும் உதவுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த சில காலமாக கிழக்கில் யுத்தம் ஓய்ந்து மக்கள் அன்றாட வாழ்கையினை அமைதியாக கொண்டு செல்லும் வேளையில் தமது குழந்தைகளையும் நம்பிக்கையோடு தனிமையில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்புகின்ற சூழலில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளமை மிகவும் மன வேதனைக்குரிய விடையமாகும். இவற்றுக்கு தற்போது புதிதாக உருவாகியுள்ள பேருந்து ஓட்டுனர்களிடையே ஏற்பட்டுள்ள போட்டியான சூழ்நிலையே காரணமாக கரதப்படுகின்றது. ஒரு மாணவன் பேருந்துக்காக காத்திருந்து கொண்டிருக்கும் போது அவனை கடந்து பல பேருந்துகள் செல்கின்றபோதும் அம்மாணவனையோ மாணவியையோ பேருந்து ஓட்டுனர்களால் ஏற்றிச் செல்ல முடியவில்லை இதனால் அம்மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் நேரத்திற்கு தமது கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாமைக்கும் எமது சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கும் இவர்கள் காரணமாக இருப்பது வெட்கப்படவேண்டிய விடயமாக உள்ளது. பேருந்த ஓட்டுனர்களே இது உங்களின் கவனத்திற்கு நீங்களும் ஒரு சமூக சேவகர்கள்தான் உங்கள் சேவையும் எமது சமூத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது அதனை நீங்கள் சரியான முறையில் செய்வீர்களானால் எமது மாணவ சமூதாயம் முன்னேற்றமடைவதுடன் என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டதாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உமது சேவையை செய்ய வேண்டும் என விருத்தி கேட்டுக்கொள்கின்றது.

ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!


ஒரு கணணி பொறியாளர் படத் தயாரிப்பாளராக மாறினால்........???!!!!

படத் தலைப்புகளை எப்படி கொடுப்பார்.....??

ஒரு சின்னக் கற்பனை.....

ஜி மெயில் சன் ஆப் இ மெயில்.....

ராம் தேடிய மதர் போர்ட்...

7 ஜி கூகுள் காலனி....

எனக்கு 20 எம் பி உனக்கு 18 எம் பி......

புதுக் கோட்டையிலிருந்து பெண்டியம் 4........

காலமெல்லாம் ஆன்டி வைரஸ் வாழ்க.......

ஹார்ட் டிஸ்குக்கு மரியாதை.......

வைரசை வேட்டையாடு விளையாடு.....

கீ போர்டும் நானும்......

ஜோய்ச்டிக் விளையாடல்.....

சொல்ல மறந்த பாஸ்வர்ட்.....

எங்க ஊரு ப்ரோக்ராமர்.........

ஒரு மவுசின் கதை .......

மானிட்டருக்குள் மழை.....

எல்லாம் ப்ரொஸெஸர் செயல்......