அனைவரின் கண்களையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் பட விழா படு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்தியாவின் அழகுமிகு நடிகை யான ஐஸ்வர்யா ராய் படு ஸ்டைலிஷான உடையில் வந்து கேன்ஸ் விழாவையே கலக்கி விட்டார்.63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார்.விழாவின் தொடக்கமாக வெளியிடப்பட்ட ரிட்லி ஸ்காட்டின் ராபின் ஹூட் பட வெளியீட்டுக்கு ஐஸ்வர்யா படு ஒய்யாரமாக வந்து சேர்ந்தார். கலங்கடிக்கும் லேவண்டர் கலர் கவுன் அணிந்து வந்த 36 வயதான ஐஸ்வர்யா அனைவரின் கண்களையும் கவர்ந்தார். கடந்த ஆண்டும் கூட படு கலக்கலான உடை மற்றும் மேக்கப்புடன் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஐஸ்வர்யாவுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இணைந்து வரவில்லை. மாறாக ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா உடன் வந்திருந்தார்.இரு அழகான நடிகைகளும் படு ஸ்டைலிஷாக வந்தது கேன்ஸ் விழாவுக்கு புதுக் களையைக் கொடுத்தது.

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்


குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;
1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள்மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.
- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்
1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

பயங்கரவாதம் புற்றுநோய் போல: பாகிஸ்தானுக்கு ஆபத்து - ஒபாமா


புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஒபாமாவை கர்சாய் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், ஒபாமா நிருபர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தான் எல்லையில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் எனும் புற்றுநோய் அந்நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் எதிரியாக இந்தியா இருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் பெருகியுள்ள பயங்கரவாதத்தால் தான் அந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பழைய சந்தேகங்களையும், மோசமான பழக்கங்களையும் ஒழித்து பாகிஸ்தானுடன் தொடர்ந்து ஒத்துழைத்து, ஆப்கானிஸ்தானில் ஸ்திரமான நிலையை உருவாக்க அமெரிக்க உறுதி பூண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் பயங்கர வாதத்தை வேரறுக்க வேண்டும். பயங்கர வாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பாகிஸ்தான் பாதுகாப்பாக இருந்தால் தான் அண்டை நாடான ஆப்கனும் பாதுகாப்பாக இருக்கும்.
பயங்கவராதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசமாக்கிக்கொள்ள பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு ள்ளது. ஒரே நாளில் இந்த விஷயத்தில் வெற்றி கிட்டிவிடாது. இந்த நடவடிக்கை யால் ஏராளமான உயிர்சேதம் ஏற்படும். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள்தான் அல்- குவைதா மற்றும் தலிபான்களின் சதி ஆலோசனை மையமாக விளங்குகிறது இவ்வாறு ஒபாமா கூறினார்.

பிள்ளைகள் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு



குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் ஒருசில இடங்களில் இடம்பெற்றிரு ப்பதனால் பெற்றோர் சமீப தினங்களாக பீதிய டைந்துள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மாண வன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட் டமை ஞாபகமிருக்கலாம். அதன் பின்னர் அடுத்தடு த்து ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனால் பெற் றோர் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவலை யடைந்துள்ளனர்.
களனியில் கடத்தப்பட்ட குழந்தையொன்று மாரவில பகு தியில் வைத்து மீட்கப்பட்டதையடுத்து அக்கடத்தலின் பின்னணி அம்பலத்துக்கு வருமென எதிர்பார்க்கப்ப டுகிறது. அக்குழந்தையைக் கடத்திச் சென்றவர் ஒரு வயோதிபப் பெண் ஆவார். பொதுமக்கள் மற்றும் ஊட கங்கள் தரப்பிலிருந்து கிடைத்த ஒத்துழைப்பு காரண மாகவே இக்குழந்தையை மீட்க முடிந்துள்ளது.
இக்குழந்தை கடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரம் உண்மையிலேயே பாராட்டத் தக்கது. ஊடகங்களின் ஒத்துழைப்பு காரணமாகவே அக் குழந்தையை பொதுமகன் ஒருவரால் அடையாளம் காண முடிந்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையை அடையாளம் கண்டவுடன், உட னடியாக அக்குழந்தையையும் சந்தேகத்துக்கிடமான பெண்ணையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவரின் சமூக நேயத் தன்மையைப் பாராட்டாம லிருக்க முடியாது. இச்செயல்களையெல்லாம் சிறந்த முன்னுதாரணங்களாகக் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க அக்குழந்தை கடத்தப்பட்டதற்கான நோக்கம் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அந்தரங்கமாக நடைபெற்று வருவதனாலேயே தகவல்களை அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
குழந்தைகளைக் கடத்தும் கொடியவர்களின் நோக்கம் கப்பம் பெறுவதற்காக இருக்கக்கூடுமென ஊகிக்கப்ப டுகிறது. குழந்தைகளைக் கடத்திச் சென்று பெற்றோரி டம் கப்பம் கோரிய ஓரிரு சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன. சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவங் களும் ஞாபகமிருக்கலாம். இச்சம்பவங்களில் சம்பந்த ப்பட்ட குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்திரு ந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாகத் தணிந்தி ருந்தன. தற்போது அக்கொடியவர்கள் மீண்டும் குழந் தைகளின் உயிருடன் விளையாடத் தொடங்கியுள்ள னர். இதனை எவருமே அனுமதிக்கலாகாது. பொலி ஸார் இவ்விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் பொதுமக்களும் இது சம்பந்தமாக பொலி ஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள் பொலிஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென் பது உண்மை.
குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடன் இரு க்க வேண்டியவர்கள் பெற்றோரேயாவர். பாடசாலை க்கோ அல்லது தனியார் வகுப்புக்கோ பிள்ளைகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. அது மாத் திரமன்றி நம்பிக்கைக்குரிய நபர் தவிர்ந்த வேறு எவ ருடனும் பிள்ளைகளை வெளியிடங்களுக்கு அனுப் புவதும் தவறு. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது பெற்றோருக்கு அவதானம் அவசியம்.
குற்றவாளிகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குற்றச்செ யலுக்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுத் துவிடலாகாது.

கொழும்பில் வெள்ளம்.


கொழும்பில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கின. கொழும்பு பெல்பொல விபஸ்ஸி மாவத்தை நீரில் மூழ்கி இருப்பதையும் வாகனமொன்று முழுமையாக நீரில் மூடப்பட்ட நிலையில் கிடப்பதையும் படங்களில் காண்க.

வடமுனை அ.த.க பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளை முதல்வர் பார்த்து இரசிக்கும் காட்சிகள்.


































நாடெங்கும் குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை

நாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் ஒரு சில குறிப்பிட்ட இலக்கங்களில் வெளிவரும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. உலகளாவிய ரீதியில் மேற்படி இலக்கங்களுக்குப் பதில் வழங்கிய நபர்கள் இது வரையில் 27 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தவிர, மூளைக்கு வழங்கப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே மேற்படி இறப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. இலங்கையில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இவ்வாறு பரவலாகப் பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன.இது மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் வதந்திகள் என வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.'மரண அழைப்பு' என அழைக்கப்படும் இந்த குறுஞ்செய்திகள், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானில் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளை, ஆண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது.அதன்பின்னர் மின்னஞ்சலிலும் அவ்வாறான அச்சுறுத்தல் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பரவத் தொடங்கியதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் பீதியடையத் தொடங்கியதால் இது தொடர்பான ஆய்வுகளில் தொலைத்தொடர்புத் துறையினர் ஈடுபட்டபோதுதான் அது பொய்யான செய்தி எனத் தெரியவந்துள்ளது.அதேபோன்று, அச்சுறுத்தல் விடுக்கும் குறுஞ்செய்திகள் 2004 ஆம் ஆண்டு நைஜீரியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியதாக 'இன்டிபென்டன்ட் ஒன்லைன்' செய்திச் சேவை தெரிவித்துள்ளது

சமையல் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிப்பு

ஷெல் - ரூ. 219,
லாஃப் - ரூ. 323
சமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.
இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போக்குவரத்ததுச் சேவையே பின்தங்கிய கிராமங்களை கட்டியெழுப்பும்-கி.மா.ச.உ.பூ. பிரசாந்தன்.

வைத்தியசேவையானாலும், கல்விச் சேவையானாலும், சமூக சேவையானாலும் கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டுனாமால் போக்குவரத்துச் சேவை மிகவும் அத்தியாவசியமானதாகவுள்ளது. பட்டிப்பளை பிரதேசமே, வாகரைப் பிரதேசமோ, வெல்லாவெளி, வவுணதீவு உள்ளிட்ட எல்லைக் கிராமங்களின் மக்களுக்கு வாழ்வாதாரம் அத்தியாவசிய தேவகைள் விஸ்தரிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் வைத்தியர்கள் ஏனைய உத்தியோகஸ்தர்கள் சேவை வழங்க முன்வருகின்ற போதும், போக்குவரத்து சேவையின் குறைபாடுகளே தடைக்கல்லாக உள்ளது. எதிர்வரும் 03 வருடங்களுள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் மூலம் பெரும்பாலான பாதைகள் புனரமைக்கப்படுவதற்கான அனைத்து வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்து நேர ஒழுங்கமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்ட சாரதிகள் நடத்துனர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறையின் போது பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நடத்துனர்களும், சாரதிகளும் பணயிகளுடன் அன்பாக பழக வேண்டியதுடன் ஒழுக்க விதிகளிலும், நேர ஒழுங்கமைப்புக்களிலும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்து ஒரு தொழில் என்பதற்கு அப்பால் இது ஒரு சேவை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து தொழிலாளர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு முடியாது நிலைமையும் , இடைத்தரகர்கள் கொள்வனவு செய்து இலாபம் உழைப்பதற்கும் அடிகோல் இடுவது இச் சேவையாகும்.
கலை, காலச்சாரங்களில் சமூகம் மாற்றடைய வேண்டுமானால் போக்குவரத்துச் சேவையாளர்கள் பங்கு துரிதமாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் திரு. உ. யுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் திரு. உதயகுமார், திட்டமிடல் பணிப்பாளர் நந்தசேன , நிமல் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 01.05.2010 மேதினமன்று மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை .-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

தமிழர் பிரதிநிதித்துவத்தின் இருப்பை தக்க வைக்கவே நாம் தேர்தலில் தனித்த போட்டியிட்டோம்.கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

இம் மாநகரத்தில் பேருந்து நிலைய கல் நாட்டும் விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து மதப் பெரியார்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களான கௌரவத்திற்குரிய துரைரெட்ணம், கிருஸ்னாணந்தராஜா, பூ.பிரசாந்தன், மாசிலாமணி ஐயா அவர்களுக்கும், மாநகர சபை அரசியல் உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏனைய பிரமுகர்களுக்கும், கட்டட ஒப்பந்த காரர்க்கும் அனைவருக்கும் வணக்கம்.
இந்த அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது பாட்டாளி புரம் என்பதனாலும், இன்று பாட்டாளி தினம் என்பதனாலும் இந்த முக்கியத்தவம் வாய்ந்த நாளில் பஸ் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியோடு இந்த மட்டக்களப்பு மாநகரிலே பல்வேறு தரப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையிலே, இன்று மட்டக்களப்பிலே பேருந்து நிலையம் மிக அழகாக, ஏனைய மாகாணத்திலிருக்கும் பஸ் பேருந்து நிலையத்தை ஒத்த பேருந்து தரிப்பிடம் ஒன்றை இங்கு எதிர்வரும் பத்தாம் மாதம் திறந்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை. அந்த காட்சியை நாமும் கண்டு கழிப்போம் என்ற சந்தோசமான நாளிலே இங்கு அமர்ந்திருக்கும் மட்டக்களப்பு வாழ் பெருமக்கள் ஒருவிடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அக்குழந்தையை அழகுபடுத்த வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இருப்போம். அதே போன்றுதான் இந்த மட்டக்களப்பு மாவட்டம் மீன் மகள், வாவி மகள் என்று பேர் வாங்கிய இம் மாவட்டம் ஒரு அழகான மாவட்டமாக வரவேண்டும் எனறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையிலே இது ஒரு அழகான மாநகரம். ஏதிர்காலத்தில் இதன் எழிச்சியோடு இதன் அடையாளங்களை காப்பாற்றிக்கொண்டு அழகு பெற வேண்டும் என்ற பெரு முயற்சி எனக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் இருக்கின்றது அதன் வெளிப்பாட்டு தன்மை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த பேருந்து நிலையம் என்பது முன்னரும் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டிருந்தது. நான் நினைக்கின்றேன் 1979ம் ஆண்டு ராஜம் செல்வநாயகம் இருந்த காலப்பகுதியிலே இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரான தயா என்கின்ற அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதாக கதை கூறுகின்றது. இருந்தும் அந்த நேரத்திலே இருந்த பணவசதிக்கும், அந்த நேரத்தில் இருந்த தொழில் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அழகு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். தற்போது இருக்கின்ற நவீன உலகத்தில் எங்களது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் இந்த திட்டம் மிக நீண்ட காலமாக இந்த மட்டக்களப்பை நலன் விரும்பிகள் ஊடாகவும், மக்கள் ஊடாகவும் இதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதிகளிலே நாங்கள் நிச்சயமாக செய்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது இதனை மாகாண கட்டிட பொறியியலாளர் வேல்மாணிக்கம் மூலம் இதனை படமாக்கி இருந்தோம். படங்களை வரைந்த பின் அதற்குரிய பணத்தினை பெற்றுக் கொள்ள மிக சிரமமாக இருந்தது. மாகாண சபையிலும், மாநகர சபையிலும் பணம் இல்லாத காரணத்தினால் இங்கு இயங்கிக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு கரையோர அபிவிரத்தி திட்டத்திற்குள் உள்வாங்கிய பொழுது இத்திட்டம் முடிவடையும் காலப்பகுதியில் இருப்பதால் இதனை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும் இது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி என்பதனால் இதனை ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவிடம் கூறியிருந்தபோது இதை உடனடியாக செய்து தருவேன் என கூறினார். இத்தி;ட்டம் முடிந்தாலும் விசேட நிதியின் மூலம் இதனை செய்து தருவதாக கூறிவிட்டு, 10 நிமிடம் கழித்து எனக்கு போன் பண்னி P.னு குறூஸ் அவர்களை பேசச் சொல்லி இருந்தார். நான் குறூஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மன்னார் மாவட்டத்திலே இருப்பதாக கூறியிருந்தார். நான் அவரிடம் கூறியிருந்தேன், பசில் ராஜபக்ஸ உடனடியாக பேச சொல்லியிருக்கிறார். கட்டிடம் சம்மந்தமாக பேச இருக்கிறார். மட்டக்களப்பு மாநகரம் சம்மந்தமாக 08 கோடி ரூபாய் கட்டடம் சம்மந்தமாக பேசுவார் அதை செய்துகொடுக்க அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டிருந்தேன் அவர் பேசியதன் அடிப்படையில் அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நாம் பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி கூற வேண்டும் இங்கு பிறக்காமல் இருந்தாலும் மட்டக்களப்பு மாநகரம் அழகாக வரவேண்டும் இங்கும் மீனினங்கள் மிக அழகான தங்கநகைகளிட்டு அழகான சேலைகளோடும் இருக்கவேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற பணிப்பாளர் குரூஸ் அவர்களுக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சாமித்தம்பி ஐயா அவர்களுக்கும் மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் எனினும் இந்ததிட்டம் அமுலாகி இருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் இது முழுமை பெற்று அனைவரும் எதிர்பார்த்த கட்டிடமாக பத்தாம் மாதம் திறப்பதற்கு வழிவகை செய்யவேண்டிய பொறுப்பு எமது ஒப்பந்தகாரரான மட்டக்களப்பு அழகுபெற நினைக்கின்ற ஒப்பந்தகாரரான ஆஞ்சநேயர் ஐயாவே காரணம் என நினைக்கின்றேன் நாங்கள் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சி எடுத்திருந்தாலும் எமது மக்கள் எதிர்பார்த்த அளவு அபிவிருத்திப்பணிகள் நடக்கவில்லை என்பதை உரைக்க முடிகின்றது மாநகரசபை உறுப்பினர்கள் மிக அக்கறை எடுக்கவேண்டும் நான் இரவு கொழும்பிலிருந்து வந்தபோது ஓட்டமாவடி பாலம் தாண்ட எல்லாப்பகுதிகளிலும் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மட்டக்களப்பிற்குள் வந்ததும் அரசடி கோவில் தாண்டியதும் எந்தவித மின்குமிழ்களும் இல்லை. இந்தபாதையில் மாத்திரம் ஐந்தாறு மின்குமிழ்கள் இருந்தது இதையெல்லாம் நடைமுறைப்படுத்த உள்நாட்டு உதவியோ வெளிநாட்டு உதவியோ அல்லது மாகாணசபை உதவியோ தேவையில்லை இங்கிருக்கின்ற மாநகரசபையே இங்கிருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் செய்யமுடியும.; இதற்கு வேறு பணம் தேவையில்லை. இங்கிருக்கின்ற மாநகரசபையை இயக்குபவரும் வர்த்தகர்களும் இப்பகுதியை வெளிச்சமுள்ள பகுதியாக ஆக்கலாம். இந்த சிறிய விடயத்தை கூட செய்யமுடியாமல் இருப்பதை விட்டு மனவருத்தம் அடைகிறோம். இங்கு வேலை செய்கின்றவர்கள் ஆகக்குறைந்தது ஒருமாத சம்பளத்தை கொடுத்தாவது ஒரு பத்து மில்லியன் ரூபாவில் இந்த மட்டக்களப்பு மாநகரத்தை மின்குமிழ் ப+ட்டி அழகபடுத்தலாம் என நினைக்கின்றேன.; இருந்தாலும் தேர்தல் காலத்தில் எனது சம்பளத்தை எமது பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை அவர்களிடம் கொடுத்திருந்தேன் அவர்; அந்த பணத்தில்;தான் இப்பாதையில மின்விளக்கு எரிந்ததாக கூறியிருந்தார் நான் இதை குற்றம் கூறுவதாக கூறவில்லை. அனைவரும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற கூறுவோம் செய்யக்கூடிய விடயத்தை நாம் செய்வதில்லை எங்கிருந்தோ வரும் பிரச்சினைகளையும் யாரையாவது பிரச்சினைக்கு இழுப்பதையும் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமான எங்களது பகுதியை துப்பரவாக அழகாக வைத்து கொள்ளக்கூடிய எங்களால் முடிந்த முயற்சிகளில் இறங்கவேண்டும். இங்கு வந்திருக்கின்றவர்கள் புத்திஜீவிகளும் மாவட்டத்தை வடிவமைக்கக்கூடியவர்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி சார்ந்த , அரசியல் ரீதியான வழிகளில் இட்டுசெல்லக்கூடியவர்களும் என்ற வகையில் பேசுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோசப்படுகின்றேன். இங்கு எடுத்துக்கொண்டால் இதுவும் பாட்டாளிபுரம் என்று கூறுவார்கள். இந்த பாட்டாளிபுரம் என்பது பாட்டாளி வர்க்கத்தினர் கடந்தகாலங்களில் இந்த பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர்கூட பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்து கழைத்து இந்தப்பகுதியில்தான் வந்து மது அருந்துவதாக, நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறுவார்கள் இந்த பாட்டாளி தினம் என்பது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தினமாக இருந்தாலும் அதற்கு உலகளவில் விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்கள் 18 மணித்தியாலமாக வேலை வாங்கப்படுவதாகவும், அதனை 8 மணித்தியாலமாக குறைத்து போராட்டம் நடத்தப்பட்டு அதில் உயிர்நீத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் மடிந்தவர்கள் வெற்றியீட்டியதன் காரணமாக கொண்டாடப்படுகின்றது. இது அப்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை கொண்டாடாவிட்டாலும் பத்திரிகை அல்லது இந்த சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கின்றது
எமது பகுதியில் இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் வருமானம் குறைந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தை மறக்கமுடியாத நாளாக நான் பார்க்கிறேன் எனது தனிப்பட்ட வாழ்விலே 1993ம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று என்னால் மறக்கமுடியாது நான் முதல் தடவையாக விடுதலை போராட்டத்தில் இருந்தபொழுது யாழ்ப்பாணதத்pற்கு சென்றிருந்தேன் 1993ம் ஆண்டு இத்தினத்திலே புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆகையால் அந்த நாளை மறக்கமுடியாது. அந்தநாளில் முக்கிய தளபதியாக இருந்து இன்று இங்கு முரண்பட்ட அரசியலும் செய்துகொண்டிருக்கும் முரளிதரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. அதுமட்டுமல்ல அன்றுதான் எமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ அவர்களும் கரும்புலிகளால் வெடித்து கொல்லப்பட்ட தினம் என்ற அடிப்படையிலே எங்களது தனிப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத நாளாக பார்க்கின்றேன் அந்தவகையில் இந்தகட்டடமும் என்னால் கல் நட்டப்பட்டு நினைவில் அழியாத நாளாக பார்க்கின்றேன். எங்கோ இருந்து பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்காகவோ எங்கோ எடுக்கப்பட்ட முடிவுக்கு கொண்டாட்டம் நடாத்துவதும் எங்களது பிரச்சினைகளை முடிப்பதற்கு முடிவுகளை எடுக்காத சமூகமாக இருப்பதை எங்களால் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தலிலே கொண்டாட்ட நாளாக கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாகாணத்தை வலுப்படுத்தவும் ஆளுமைப்படுத்த மாகாணசபைக்கு ஆணை தாருங்கள் என்று பொதுமக்களிடம் ஆணை கேட்டு நின்றோம் நீங்கள் மாறாக எங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எமது மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள். அதற்கான விளைவையும் வாக்களித்த மக்கள் அனுபவிக்க போகின்றீர்கள் காரணம் என்னவென்றால் மத்தியில் அமைந்திருக்கின்ற அரசாங்கம் மிகப்பலமான அரசாங்கமாக அமைந்திருக்கின்றது ஏனென்றால் தமிழர்கள் தமிழ்த்தேசியம் பேசினார்கள் சிங்களவர்ககள் சிங்கள தேசியம் பேசினார்கள் இதன்காரணமாக சிங்களவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் முக்கியமான விடயங்களை அவர்கள் அமுல்படுத்தபோகின்றார்கள். ஒரு உதாரணத்தை உங்களுக்கு நான் சுட்டி காட்டவேண்டும். கடந்தமுறை உள்ள+ராட்சி மறுசீரமைப்பு சட்டமூலம் கிழக்குமாகாணசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்த வட்டார முறையை கொண்டுவருவதற்கும் சிறுபான்மை மக்கள் சிறிதாக பிரிந்து வாழ்கின்ற பகுதிகளில் வட்டாரமாக பிரிந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். இதை கிழக்குமாகாணசபை திருப்பி அனுப்பியிருந்தது மீண்டும் அந்த சட்டமூலத்தை அமுலாக்கி தாருங்கள் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள் கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த முதலமைச்சர் வேறு இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர் வேறு என்பதை நான் மட்டக்களப்பான் என்ற வகையில் நான் கூறியே ஆகவேண்டும். அன்று நான் திருப்பி அனுப்பிய மகஜரை இன்று அமுலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். இதன் காரணமாக வட்டாரமுறை கொண்டுவரப்பபடும் பின்னர் தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்படும் அதன் பின்னர் இன்னும் கணிசமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதை எதிர்ப்பதற்கு எமது மக்கள் எம்மை வலு இல்லாதவர்களாக தள்ளி அனுப்பியிருக்கின்றார்கள் இது வேதனைக்குரிய விடயம் இங்கு வாக்களித்து 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள் இவர்கள் கூறிய வடக்கு கிழக்கு இணைக்கமுடியுமா? இணைத்து தருவார்களா? இதைத்தான் இவர்கள் 50 வருடகாலமாக பெற்றுத்தந்திருக்கின்றார்கள். என்னத்தை கிழித்திருக்கின்றார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. இதில் நீங்கள் மீண்டும் மீண்டும் பிழைகளை விட்டுவிட்டு எமது சமூகத்தின் தலைவிதிகளை கையில் இருக்கின்ற விடயங்களைக் கூட இழக்கின்ற சமூகமாக ஆகப்போகின்ற எமது மக்கள்தான் இதற்கு பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நீங்கள் அளித்த வாக்குகளுக்காக பணி செய்யவேண்டிய மாகாணத்தை பாதுகாத்து கொடுக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் எனக்களித்திருக்கின்றது. அதற்காக நான் பணி செய்வேன் ஏனென்றால் காலம் காலமாக இந்த விடுதலைப்போராட்டம் வளரவேண்டும் தனித்தமிழீழம் எங்களுக்கு தேவையென்று சொல்லிவிட்டு 1976ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தத்தை கீறி பொட்டுவைத்து பிரகடனத்தை செய்துவிட்டு 1977ம் ஆண்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து சபாநாயகருக்கு முன்னால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழ்வோம் என சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பேசுவோம் என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்றால் எமது மாகாணம் வலுப்பெற வேண்டும் எமது சமூகம் வளம்பெற வேண்டும் என்றுதான் ஒரு அரசியல்வாதி சிந்திக்கவேண்டும் அன்று மாற்றுக்கருத்ததுக்களை வேறு வீராப்பு கதைகளையும் பேசிக்கொண்டு இன்னமும் செல்லமுடியாது எனினும் அவர்களை பேசிக்குற்றமில்லை இன்னமம் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் அவர்கள் மீண்டும் தேர்தலில் வாக்கெடுக்கவும் அவர்களின் ஆசனங்களை வைத்துக்கொண்டிருப்பதற்காகவும் அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் மாறாக நாங்கள் அப்படியல்ல அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டும் உழைத்துவிட்டு நாங்கள் கொழும்பில் வீடு வாங்கவேண்டும் என்ற கட்சியுமில்லை. முழுக்க முழுக்க எமது சமூகதத்pற்கு பணிசெய்ய வேண்டும் எமது சமூகத்திற்காக உயிர்கொடுக்கவேண்டும் என்ற மாற்று அரசியலுக்காகவும் கிழக்குமாகாணத்தில் ஒரு ஜனநாயத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அந்த உண்மையை விளங்கிகொள்ளவில்லை என்ற கவலை எங்களுக்குள் புதைந்திருக்கின்றது கடந்தகால தேர்தலில் ஏன் நீங்கள் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று கேட்டிருந்தார்கள் நாங்கள் அரசாங்கத்தோடு வெற்றிலை சின்னத்தில் கேட்டிருந்தால் இந்த முதலமைச்சர் ஆசனத்தை பெற்றுக்கொண்டோம் இல்லையென்று கூறவில்லை இந்த தேர்தலில் வெற்றிலையில் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கவேண்டும் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கும் மகிழ்ச்சியான விடயம் கொழும்பை பொறுத்தவரைக்கும். இந்த கிழக்குமாகாணசபை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பட்ட சமூக நல்லுறவு சமூக இணக்கப்பாடெல்லாம் குலைந்திருக்கும் என்ற உண்மையை நீங்கள’; விளங்கிகொள்ளவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கேட்டிருந்தால் மட்டக்களப்பில் ஒருகாலமும் நடக்காத நிகழ்வு நடந்திருக்கும் எங்களது வாக்கை வைத்து வந்திருக்கும் ஹிஸ்புல்லா அங்க அமீர் அலி ஏறாவூரில் அலிஸாகிர் மௌலானா வந்திருப்பார்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பசீர் சேகுதாவூத் வந்திருப்பார் ஒருகாலத்திலும் நடக்காத நிகழ்வு நடந்து நான்கு முஸ்லிம் எம்பிக்கள் வந்திருப்பார்கள் எங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையுமில்லை சமூகம் அடிபட்டிருக்கும் காரணம் என்ன நூறுவீத மக்களில் இருபத்தைந்துவீத முஸ்லிம்களும் எழுபத்தைந்துவீத தமிழர்களும் வாழ்கின்றார்கள். காலத்தால் நடக்காத தவறை இங்கு வந்திருக்கும் முதலமைச்சரோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தனித்துவமாக நின்றோம் முஸ்லிம் வேறு அரசியல் வேற என்று கூறவில்லை இனத்துவேசம் பேசவில்லை உரிமையென்னும்போது ஒரு சமூக உரிமையை பாதுகாக்கும் விடயம் ஒரு அரசியல்வாதிக்குள்ளது. சமூகம் சார்ந்த அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்கின்ற அடிப்படையில் அரசியல் செய்தோம் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும் கடந்தகாலத்தில் மட்டக்களப்பு மக்கள் பெரும்பிழை விட்டார்கள் யாழ்மக்கள் ஆளும் கட்சியில் மூன்றுபேரை அனுப்பியிருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று கூச்சலிடவும் ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள். கூச்சலிடுபவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருப்பார்கள் இங்க வந்திருக்கின்ற யோகேஸ்வரன் ஐயா என்ன செய்யப்போகின்றார் இங்கு வந்திருக்கின்ற அரியநேத்திரன் என்ன செய்யப்போகின்றார் கடந்தமுறை பாராளுமன்றம் வந்திருந்தார் இந்தமுறையும் வந்திருக்கின்றார் அவர் சாகும்வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என நினைக்கின்றேன் ஆகையால் இங்கு சுயநிர்ணய உரிமையையோ வடக்கு கிழக்க இணைப்பையோ செய்து தரமுடியாது அரசாங்கம் அவர்களை கூப்பிட்டுபேச எந்தவிதமான அருகதையும் இல்லாதவர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். கடந்தகாலங்களைப்போல் இன்னமும் சிங்கள பேரினவாதம் என்று பேசிப்பேசி இருக்கின்றவர்கள் பின்னால் இழுபட்டால் நாங்கள் இருக்கின்றோமா இல்லையோ என்று தெரியாது இருக்கின்றதையும் இழந்த சமூகமாக இருக்கின்றதையும் இல்லாமல் தொலைத்த சமூகமாக மீண்டும் மாவட்ட அட்சிமுறையை கொண்டு திணித்த சமூகமாக மாறுவீர்கள் என்ற உண்மையை சொல்லி எதிர்காலத்தில் நடந்த தவறுகளை மறந்து உண்மையான அரசியல் தெளிவுள்ள சமூகமாக மாறவேண்டும் அரசியல் ரீதியாக நீங்கள் சிந்திக்கவேண்டும் மாறாக எங்கிருந்தோ எழுகின்ற வடபகுதியை மாத்திரம் தலைமைத்துவங்களை வைத்துக்கொள்கின்ற பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இழுபட்டு நீங்கள் அழியக்கூடாது. உங்களது பிரச்சினை உங்களது சமூகப்பிரச்சனை உங்களுக்கும் பிரச்சினை என்ற ஆழமான அரசியல்பார்வை உள்ள அரசியல் சமூகமாக மாறவேண்டும் என்று வண்மையாக கேட்டுக்கொண்டு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகூறி முடிக்கின்றேன் நன்றி வணக்கம் .

அபிவிருத்தியின் முக்கியத்துவம் இனி எல்லைக்கிராமங்களுக்கே- கிழக்கு மாகாண முதலமைச்சர்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக விளங்குகின்ற வடமுனை கிராமத்திற்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அங்குள்ள பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எல்லா வகையான துன்பங்களையும் தாண்டி வந்து நாம் ஓர் ஆரம்பப்புள்ளியில் இருக்கின்றோம். இனிமேல்த்தான் நாம் தொடர்ந்து எமது வாழ்க்ககையின் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எமது சமூகத்தினது அபிவிருத்திகள் பற்றி பேசுவதற்கான சூழல் தற்போதுதான் உருவாகி இருக்கின்றது. இதை எமது மக்;கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் உறுதியான ஓர் அரசியல் தலமைத்துவத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும். இன்று கிழக்கு மாகாணத்திலே அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்துறை சார்ந்த அபிவிருத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதனை யாரும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாண சபையின் தோற்றத்தின் பின் அதிக பணிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதற்கு இவ் வடமுனை, ஊத்துச்சேனை கிராமங்கள் விதிவிலக்கல்ல எனவும் குறிப்பிட்டார்.
நெக்டெப்பின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வடமனை பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் இவ் வடமுனைக்கிராமம் ஓர் எல்லைக் கிராமமாக இருப்பதன் காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு இக்கிராமம் முன்னெடுக்க வேண்டி நேரிடும். அதாவது எல்லைப்பிரச்சனை, காணிப்பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே போகும். எனவே இனி வருகின்ற காலங்களில் நாமே எமது சமூகத்தை பலமாக்குவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அரசியல்வாதி என்ற ரீதியிலும், மட்டக்களப்பான் என்ற ரீதியிலும் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் குறிப்பிட்டார். தோடர்ந்து பேசுகையில் எனது நிதி ஒதுக்கீட்டிலே அதிகமான நிதிகளையும், வேலைத்திட்டங்களையும் எல்லைக்கிராமங்களுக்கே முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.
இக்கிராமத்தை பொறுத்த வரையில் முக்கிய பிரச்சனை குடிநீhப்பிரச்சனை மற்றும் வீடு இன்மை,போக்குவரத்து, மின்சாரம், தபால்சேவை மற்றும் கல்வி இவை அனைத்தையும் நான் மிகவும் அதிக அக்கறை கொண்டு செய்த தருவதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். நான் ஏற்கனவே ஒதுக்கிய 75 இலட்சம் ரூபாய்க்கும் இவ்வேலைத்திட்டங்களை செய்ய முடியாது எனவே இனி வருகின்ற நிதி ஒதக்கீட்டில் இவற்றிற்கு அதி முக்கியத்துவம் கொடத்து நான் இதனால் செய்து தருவேன் எனவும் குறிப்பிட்ட அவர் இக் கிராமத்திற்கு இதுவரை வீட்டுத் திட்டம் எதுவும் வரவில்லை எனவே இவ் ஆண்டு வருகின்ற விட்டுத்திட்டத்தினை நான் வடமுனைக் கிராமத்திற்கு ஏற்படடுத்தித் தருவேன் எனவும் குறிப்பிட்டார். இப்பாடசாலையின் அதிபர் ஜீவநாதன். தலமையில் இடம் பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவிற்கு கிழக்குமாகணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கல்குடாவலயக்கல்விப்பணிப்பாளர். சுபாசக்கரவத்தி,கல்விப்பிரிவின் பொறியியலாளர். கிருஸ்ணதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் வாகைப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகள்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேசத்திற்கு அதிகளவு நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளார். ஆதனடிப்படையில் சகலதுறை சார்ந்த அபிவிருத்திப் பணிகளுக்காகவும் சுமார் 75 மில்லியன் ரூபாய் விசேட நிதியினை தாம் இவ் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கிடு செய்துள்ளார்.
அனைத்து வகையிலும் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற வாகரைப் பிரதேசத்தின் கல்வி நீர்ப்பாசனம், விவசாயம், சமூக அபிவிருத்தி வீதி அபிவிருத்தி நிர்வாகம் எனப் பல துறைகளுக்குமாக மேற்படி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று (05.05.2010) வாகரைப் பிரதேசத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் குறித்த துறைசார்ந்த அபிவிருத்தி பணிகளுக்கான திணைக்களங்களுக்கு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பித்து மூன்று மாதங்களுக்குள் அனைத்த அபிவிருத்திப் பணிகளும் நிறைவடைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அபிவிருத்திப் பணிகளில் சில.
நீர்ப்பாசனம்:- கட்டுமுறிவு வாய்க்கால் புனரமைப்பு - 01 மில்லியன்.
விவசாயக்கிணறு - 0.35 மில்லியன்.
பால் சேகரிப்பு நிலையம் வாகரை. - 1.5 மில்லியன்.
ஆடு வினியோகம். - 1.5 மில்லியன்.

தட்டமுனை பாடசாலை - 7.5 மில்லியன்.
பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கு அமைத்தல். - 1.5 மில்லியன்.
கட்டுமுறிவு அ.த.க பாடசாலை விளையாட்டு மைதானம் அமைத்தல். - 0.5 மில்லியன்.
பொது விளையாட்டு மைதானம் அமைத்தல் மாங்கேணி - 2.5 மில்லியன்.
பொது விளையாட்டு அரங்கு அமைத்தல் வாகரை. - 03 மில்லியன்.
பொது மலசல கூட வசதி கதிரவெளி பொது நூலகம். - 0.11 மில்லியன்.
கொங்கிரீட் வீதி பால்சேனை பெரிய சாமி கோவில் வீதி – 1200 மீற்றர். - 13 மில்லியன்.
கிறவல் வீதி (புதூர் வீதி- கதிரவெளி – 1300மீற்றர்) - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – மாங்கேணி – 300மிற்றர்) - 0.5 மில்லியன்.
சந்தை வீதி – புச்சாக்கேணி - 02 மில்லியன்.
குறுக்கு வீதி – கிரிமிச்சசை. - 0.5 மில்லியன்.
குறுக்கு வீதி சல்லித்திவு. - 0.5 மில்லியன்.

கிராம மட்ட அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டுமொரு புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது-நாமல் ராஜபக்ஷ

நாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள் தான் வாழ்ந்தார்கள்.
இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.
பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.
குறிப்பாக §சேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.
1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித் திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மும்பையின் மிக பிரபல்யமான இடங்களை இலக்கு வைத்து லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல்களின் போது சுமார் 174 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு பிரிவினர் அஜ்மல் கஸாப்பை மாத்திரமே உயிருடன் பிடித்திருந்தனர்.
குறித்த அமைப்பின் ஏனைய தீவிரவாதிகள் பாதுகாப்பு பிரிவினரின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒன்றறை வருடங்களாக மும்பை நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அவருக்கான தண்டனை நாளைய தினம் வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு இந்தியர்கள் இன்றைய தினம் மும்பை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய அஜ்மல் கஸாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.