16வது சார்க் உச்சி மாநாடு

16வது சார்க் உச்சி மாநாட்டிற்காக பூட்டான் நாட்டின் திம்பு நகர் தயாராகி வருகின்றது. திம்புவிலுள்ள பிரதான வீதியின் இரு மருங்கிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எட்டு நாட்டுத் தலைவர்களதும் வர்ண புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

மெக்அஃபி ஆன்ட்டி வைரஸ் கணினிகளை முடக்கியது


கணினி பாதுகாப்புக்கு சிறந்த ஒன்று என்று பெயர் வாங்கிய மெகாஃபி ஆன்ட்டிவைரஸ் இவ்வாரத்தில் புதிய அப்டேட் ஒன்றின் போது தனதுவாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இடைஞ்சலை உருவாக்கிவிட்டதற்காகமன்னிப்பு கேட்டிருக்கிறது.அப்டேட் செய்யப்பட்ட புதிய டாட் ஃபைல் ஒன்றின்காரணமாக பள்ளிகள் , மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என இந்தஆன்ட்டி வைரைஸை பயன்படுத்தும் பலர் இதனால் கடுமையாகபாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.விண்டோட்ஸ் எக்ஸ் பி கணினிகள் இதனால் க்ராஷ் ஆகுவதும் மீண்டும்மீண்டும் ரீ பூட் ஆகுவதுமாக இருந்திருக்கின்றன. SVCHOST.EXE என்கிறவிண்டோஸ் கோப்பை தவறான வைரஸ் என்று ஆன்ட்டி வைரஸ் கணக்கில் எடுத்தால்நிகழ்ந்த தவறை நிவர்த்தி செய்ய சூப்பர் டாட் ரெமிடேசன் டூல் என்ற ஒன்றைஉடனடியாக தயார் செய்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தளத்தின் உதவியைநாடியதால் வேறு ஒரு தனித்தளத்தில் எவ்வாறு கணினிகளை மீட்டெடுக்க வேண்டும்என தகவல்களை பதிவிட்டது.தவறு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே விரைவாக சரிசெய்யப்பட்டிருந்தாலும் இதுநிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கக்கூடிய செயலாகும். பாதிக்கப்பட்டகணினிகளான விண்டோஸ் எக்ஸ்பி எஸ் பி த்ரீ மாடல்ககளின் மீது தங்கள் புதியகோப்பை பரிசீலிக்காமல் விட்டதால் தவறு நிகழ்ந்ததாக கூறி இருக்கிறார்கள்.சன் பெல்ட் மென்பொருளாளர்கள் மெகஃபியின் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைகவர ஆறுமாத இலவச பாதுகாப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால்அவர்களூம் இதுபோன்ற தவறுகள் நிகழாது என உறுதி கூறமுடியாது.

பழைய குருடி கதவ திறடி-ஆனந்த சங்கரி.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டவுடன் அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத வகையில் கருத்துக்களை வெளியிடுவது பழைய குருடி கதவ திறடி என்பது போல உள்ளதாகவும், தாம் தனி ஈழக் கொள்கையை வைத்து அரசியல் நடத்தவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் ஓர் ஊடகத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துக்கள நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது வடக்கில் ஒழுங்கான முறையில் தேர்தல் இடம்பெறவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மிக அடக்குமுறையான விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகவும், தமது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒழுங்கான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட களத்தில் நிற்க அனுமதிக்க வில்லை எனவும் அதன் காரணமாகவே தமது கட்சி ஒரு ஆசனத்தை கூட பெற முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.