சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 67 பேர் பலி


சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குறைந்தது 23 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தெரிகிறது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.குவின்காய் மாகாணத்தின் ஜீகூ நகரில் இருந்து 30 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments: