கிழக்கு தமிழ் மக்கள் எமது கட்சியை தூக்கி எறியவில்லை, கட்சித்த தலைவர் சி.சந்திரகாந்தன்.


நடைபெற்று முடிந்த 7வது பாரர்ளுமன்ற பொதுத் தேர்தலிலே கிழக்கு மாகாணத்திலே எமது கட்சி கிட்டத்தட்ட 23500 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. நாம் எதிர் கொண்ட முதலாவது தேர்தலிலே இவ்வளவு பெருந் தொகை வாக்கு எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. இதனடிப்படையில் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எமது கட்சியினை தூக்கி எறியவில்லை என த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலா மன்றம் ஒழுங்கு செய்திருந்த கலை நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் தற்போது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்று ஆசனங்களும் அம்பாறையில் ஒரு ஆசனமும் திருகோணமலையில் ஒரு ஆசனமுமாக மொத்தமாக ஐந்து ஆசனங்கள் பெற வழிவகுத்திருக்கின்றார்கள் இவ்வாறு வாக்களித்த மக்களுக்காக இத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏதாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கில் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு அதிகப்படியான சேவைகளை வழங்க வேண்டும். 6வது நாடாளுமன்ற தேர்தலிலே 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு எதனையுமே செய்யவில்லை ஆனால் தற்போது வெறுமனே 14 ஆசனங்கள்தான் கிடைத்திருக்கின்றது இதனை வைத்துக்கொண்டாவது ஏதாவது நடைமுறைச்சாத்தியமான விடயங்களைப் பற்றி பேசி எமது மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவர இவர்கள் உழைக்க வேண்டும் அவ்வாறு செய்வார்களாக இருந்தால் கிழக்கில் உள்ள ஓர் தமிழ் கட்சியின் தலைவர் என்ற வகையில் நான் முதலில் மகிழ்ச்சியடைவேன் எனவும் குறிப்பிட்டார்.ஓட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்திலே 23அயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் எமது கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் அதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலிலே 43 ஆயிரத்திற்கு மேல் எனக்கு வாக்களித்து முதலமைச்சராக்கி இருக்கின்றார்கள் எனவே இம்மக்களுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். வாக்களித்த மக்கள் மாத்திரமன்றி கிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு மிகவும் அழகானதும் அனைத்து துறைகளிலம் சிறந்த ஓர் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற நான் முழுமையாக பாடுபடுவேன். ஆதற்கு எமது மக்கள் பூரண ஆதரவினை இனிவருகின்ற காலங்களில் வழங்க வேண்டம் எனக் கேட்டுக்கொண்டார்.

0 comments: