
குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நாட்டின் ஒருசில இடங்களில் இடம்பெற்றிரு ப்பதனால் பெற்றோர் சமீப தினங்களாக பீதிய டைந்துள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மாண வன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட் டமை ஞாபகமிருக்கலாம். அதன் பின்னர் அடுத்தடு த்து ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனால் பெற் றோர் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவலை யடைந்துள்ளனர்.
களனியில் கடத்தப்பட்ட குழந்தையொன்று மாரவில பகு தியில் வைத்து மீட்கப்பட்டதையடுத்து அக்கடத்தலின் பின்னணி அம்பலத்துக்கு வருமென எதிர்பார்க்கப்ப டுகிறது. அக்குழந்தையைக் கடத்திச் சென்றவர் ஒரு வயோதிபப் பெண் ஆவார். பொதுமக்கள் மற்றும் ஊட கங்கள் தரப்பிலிருந்து கிடைத்த ஒத்துழைப்பு காரண மாகவே இக்குழந்தையை மீட்க முடிந்துள்ளது.
இக்குழந்தை கடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் மேற்கொண்ட பிரசாரம் உண்மையிலேயே பாராட்டத் தக்கது. ஊடகங்களின் ஒத்துழைப்பு காரணமாகவே அக் குழந்தையை பொதுமகன் ஒருவரால் அடையாளம் காண முடிந்துள்ளது.
கடத்தப்பட்ட குழந்தையை அடையாளம் கண்டவுடன், உட னடியாக அக்குழந்தையையும் சந்தேகத்துக்கிடமான பெண்ணையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவரின் சமூக நேயத் தன்மையைப் பாராட்டாம லிருக்க முடியாது. இச்செயல்களையெல்லாம் சிறந்த முன்னுதாரணங்களாகக் கொள்ள வேண்டும்.
இது ஒருபுறமிருக்க அக்குழந்தை கடத்தப்பட்டதற்கான நோக்கம் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அந்தரங்கமாக நடைபெற்று வருவதனாலேயே தகவல்களை அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
குழந்தைகளைக் கடத்தும் கொடியவர்களின் நோக்கம் கப்பம் பெறுவதற்காக இருக்கக்கூடுமென ஊகிக்கப்ப டுகிறது. குழந்தைகளைக் கடத்திச் சென்று பெற்றோரி டம் கப்பம் கோரிய ஓரிரு சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன. சில குழந்தைகள் உயிரிழந்த சம்பவங் களும் ஞாபகமிருக்கலாம். இச்சம்பவங்களில் சம்பந்த ப்பட்ட குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்திரு ந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாகத் தணிந்தி ருந்தன. தற்போது அக்கொடியவர்கள் மீண்டும் குழந் தைகளின் உயிருடன் விளையாடத் தொடங்கியுள்ள னர். இதனை எவருமே அனுமதிக்கலாகாது. பொலி ஸார் இவ்விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் பொதுமக்களும் இது சம்பந்தமாக பொலி ஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் வழங்குகின்ற தகவல்கள் பொலிஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென் பது உண்மை.
குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் பொறுப்புடன் இரு க்க வேண்டியவர்கள் பெற்றோரேயாவர். பாடசாலை க்கோ அல்லது தனியார் வகுப்புக்கோ பிள்ளைகளை தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. அது மாத் திரமன்றி நம்பிக்கைக்குரிய நபர் தவிர்ந்த வேறு எவ ருடனும் பிள்ளைகளை வெளியிடங்களுக்கு அனுப் புவதும் தவறு. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது பெற்றோருக்கு அவதானம் அவசியம்.
குற்றவாளிகள் எங்கும் இருக்கலாம். ஆனால் குற்றச்செ யலுக்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுத் துவிடலாகாது.

0 comments:
Post a Comment