பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலி.

பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வாகன சோதனைச் சாவடியில், போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து, மோதி வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பாதுகாப்புப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

0 comments: