
சொகுசான கடைமுன்னே தர்மம் ஏந்தும் மூதாட்டி கடைக்குள் சென்று வந்தவனிடம் தர்மம் கேட்ட மூதாட்டியிடம் கொடுக்க சில்லறை பணம் இல்லை, நாளை தருகின்றேன் பாட்டி பதில் சொல்லிவிட்டு சென்றவனுக்கு பாட்டி ஏதாவது தன்னைப்பற்றி குறையாக எண்ணிவிடுவாரோ என்று மனதில் ஒரு சஞ்சலம், வைத்திருக்கும் பெரிய தொகைக்கு ஏதாவது வாங்கிவிட்டு மீதிச்சில்லறையில் பாட்டிக்கு தர்மம் செய்ய மீண்டும் கடைக்குள் புகுந்து தன் நண்பர்களுக்கு குளிர்பானங்கள் வாங்கிவிட்டு மீதிப்பணத்தில் ஒரு தொகை பாட்டி எதிர்பார்க்காத வகையில் (வேறு ஒருவரிடம் தர்மம் கோரும் வேளையில்) அவரின் கைகளில் வைத்தவனை திரும்பி பார்த்த பாட்டி மனதார வாழ்த்தினார் ஆனால் அவருக்கு இவன் ஏற்கனவே தனக்கு தர்மம் செய்யாதவன் என புரியவில்லை. இதனால் பாட்டியை பொறுத்தவரை முதல் தெரிந்தவன் தனக்கு தர்மம் செய்யதவன் தற்போது தர்மம் செய்பவன் புதியவன் இதனால் அனுக்கு விடுக்கப்பட் சாபம் சரி செய்யப்படவில்லை செய்யப்படவில்லை என்பதுவே வேடிக்கை.

0 comments:
Post a Comment