மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அங்கத்தவத்தினை பெற்ற இளைஞர் யுவதிகள்.


இதுவரை காலமும் தமக்கென ஒரு நிலையான அரசியல் பலம் இல்லாமல் இருந்த குறையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மாற்றியமைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவிப்பு.





இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்பு ஒன்றுகூடல் ஒன்றின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் த.ம.வி.பு கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் த.ம.வி.பு கட்சி தனித்த போட்டியிடுகின்ற அதே வேளை தனது மாபெரும் மக்கள் வெள்ளம் திரண்ட இறுதி பிரச்சாரக் கூட்டத்தினையும் நிறைவு செய்துள்ளது. கட்சியின் கொள்கை உறுதிப்பாடு என்பவற்றை புரிந்துகொண்டு. மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பல இளைஞர் யுவதிகள் மற்றும் முதியவர்கள், தாய்மார்கள், என பலரும் இன்று தமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்ப ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து தமது அங்கத்தவத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





0 comments: